மேலும் அறிய
Tamilnadu Roundup: கரூர் சம்பவம்-இபிஎஸ் குற்றச்சாட்டு, வரலாறு காணாத உச்சத்தில் தங்கம், இலங்கை கடற்படை அட்டூழியம் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடி, இறுதியில் தமிழ்நாடே வெல்லும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு.
- கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் ஒரு விபத்து அல்ல என ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
- உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் அவரது மகன் அன்புமணி ராமதாஸ்.
- கரூர் கூட்ட நெரிசல் வழக்குகளில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய கண்ணன், டேவிட், சசி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு. இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனை. ஒரு கிராம் 11 ஆயிரத்தை கடந்து ரூ.11,060-க்கு விற்பனை.
- சென்னை மெரினா நீச்சல் குளத்தின் பராமரிப்பு பணிகள் முடிந்ததை அடுத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நாளை மீண்டும் திறப்பு.
- சென்னை மற்றும் புறநகரின் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
- கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 11 மீனவர்கள் காயம். என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலைகள், மீன்களை பறித்துச் சென்றதாக மீனவர்கள் வேதனை.
- கரூர் திருமாநிலையூரில் ரூ.40 கோடியில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பேருந்து நிலையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு.
- மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக தகவல். அதிமுகவினர் திரண்டதால் ப்ரபரப்பு.
- கோவையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைக் கூறி, விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பாஜக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட 3 பேர் கைது.
- தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 60 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது. சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement





















