மேலும் அறிய
Tamilnadu Roundup: இருட்டுக்கடை அல்வா யாருக்கு சொந்தம்? ரயிலை கவிழ்க்க சதி.. - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச்செய்திகள்
Source : ABP Live
- சென்னை புளியந்தோப்பு பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைக்கும் குடோன்களாக மாற்றி விற்பனை செய்து வந்த சுரேஷ் என்பவர் கைது. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட புருசோத்தமன் என்பவருக்கு போலீசார் வலைவீச்சு.
- நெல்லை இருட்டுக்கடை அல்வா யாருக்கு சொந்தம்? என்கிற புதிய பிரச்னை உருவாகியுள்ளது.
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்.25) ஜம்மு காஷ்மீர் பயணம்
- அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஏப்.25) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது
- உதகை ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று(ஏப்.25) தொடங்கி வைக்கிறார்
- 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
- திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே சென்னை செல்லும் தண்டவாளத்தில் லைன் மாறும் இடத்தில் போல்ட்கள் மற்றும் நட்டுகள் அகற்றம்
- முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் காலமானார் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி
- அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள்,நேரில் சென்று ஆறுதல்
- தமிழ்நாட்டில் ரூ.172.3 கோடி வசூலித்த 'குட் பேட் அக்லி'
- போப் ஆண்டவர் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் பங்கேற்க வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















