![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Meendum Manjapai : ‛மஞ்சப்பை என்பது அவமானம் அல்ல...’ -முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
மஞ்சப்பை என்பது அவமானம் அல்ல என்றும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
![Meendum Manjapai : ‛மஞ்சப்பை என்பது அவமானம் அல்ல...’ -முதல்வர் ஸ்டாலின் பேச்சு! tamilnadu cm mk stalin talk about proud of cloth bags and danger of plastic use Meendum Manjapai : ‛மஞ்சப்பை என்பது அவமானம் அல்ல...’ -முதல்வர் ஸ்டாலின் பேச்சு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/23/0d05a2b24aca5cae405d9f9be16c1e53_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் காரணமாக சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு நாடுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் இன்று பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி தொடங்கி வைத்தார்.
மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
“ மஞ்சப்பை அவமானம் அல்ல. அழகான நிறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள் எல்லாம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் உடனடியாகக் குறைக்க வேண்டும். மஞ்சப்பைதான் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது.
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிறகு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் சூழலை மாசாக்குகின்றன. பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால் அது மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால், மண் பாதிக்கப்படுகிறது. மண் பாதிக்கப்பட்டால் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. கால்நடைகள் அதைச் சாப்பிட்டு உயிரிழக்கும்.
பிளாஸ்டிக்கை நீர்நிலையங்களில் தூக்கி எறிந்தால் அங்குள்ள நீர் நிலையங்களும் மாசடைகின்றன. கடலின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே, பிளாஸ்டின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களிலும் இடைவிடாது பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்கம் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்துவிட முடியாது. மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும். எனவே, மஞ்சப்பைதான் சிறந்தது. அனைத்து தொழில்களிலும் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முன்னோடியாக திகழ வேண்டும். “
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் படிக்க :மாஜிஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்: வெளிநாடு தப்புவதை தடுக்க நடவடிக்கை!
மேலும் படிக்க :குடிபோதையில் பணிக்கு வந்த பெண் சமையல் உதவியாளர் - போதை தலைக்கேறியதால் ப்ளாட் ஆனார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)