மேலும் அறிய

Children authors : தொடங்கப்பட்டது தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்!

இணைய வழியே நடந்த இந்த மாநாட்டில் 250க்கும் அதிகமானோர் பங்குபெற்றனர். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இணையவழி சிறார் குழுக்கள், சிறார் செயற்பாட்டாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.

தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள். கதைசொல்லிகள் இணைந்து தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (13/04/2021) அன்று தொடங்கியிருக்கிறார்கள். அதன் அமைப்பு மாநாடு இணையம் வழியே நடைபெற்றது. அதுகுறித்தப் பத்திரிக்கைச் செய்திக் குறிப்பில் 


Children authors : தொடங்கப்பட்டது தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்!


’தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள். கதைசொல்லிகள் இணைந்து தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கப்பட்டது.
மாநாட்டுக்குத் தலைமையேற்ற எழுத்தாளர் உதயசங்கர். சங்கத்தின் தேவையையும் படைப்பாளிகள் ஒன்றிணைவதன் அவசியத்தையும் விளக்கினார், சங்கப் பொதுச்செயலாளர் விழியன், குழந்தைகள் மீது எந்தவிதமான வன்முறை நிகழ்த்தப்பட்டால், அதற்கு எதிராகவும் குழந்தைகளின் நலன் சார்ந்தும் சங்கத்தின் குரல் ஒலிக்கும். குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதோடு, அவர்களை எழுதத் தூண்டும் செயல்களை இச்சங்கம் முன்னெடுக்கும். எழுத்தாளர்கள் எழுதுவதற்கு உரிய கலை இலக்கியத்தின் பங்களிப்பை அதிகரிக்க சங்கம் செயல்படும்' என்றார்

த.மு.எ.க.ச.வின் தலைவர் ச.தமிழ்செல்வன் தனது வாழ்த்துரையில், குழந்தைகள் நகரம், மாநகரம், கிராமம் உள்ளிட்ட பல அடுக்குமுறைகளில், மாறுபட்ட வாழ்க்கைச் சூழல்களில் வளர்கிறார்கள் அச்சூழலுக்கு ஏற்ற படைப்புகள் நமக்குத் தேவை. குழந்தைகளை கேள்வி கேட்கத் தூண்டினாலே போதும். மேலும், தங்கள் உலகத்துக்கு அந்நியமானவற்றையும் அங்கீகரிக்க, சமமாக நடத்தும் குணத்தை வளர்த்தெடுக்கும் படைப்புகளை உருவாக்க வேண்டியது. இக்காலத்தின் அவசியம்" என்று தெரிவித்தார்.

க.இ.பெ மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் இரா. காமராசு, "இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில் ஆக்கபூர்வமான இந்த முயற்சி பாராட்ட வேண்டியது, வாழ்த்துக்குரியது’ என்று வாழ்த்தினார்.

வி.க.இ.மன்றத்தின் மாநிலச் செயலாளர் யாழன் ஆதி,”புகழ்பெற்ற அரசியல் ஆளுமை எம்.சி.ராஜா சிறுவர்களுக்கு அற்புதமான பாடல்களை எழுதியிருக்கிறார். அவற்றைத்தான் நாங்கள் சிறுவயதில் பாடியிருக்கிறோம்" என்று, அது குறித்து சிறப்பான அறிமுகத்தை வழங்கினார். பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற ஆயிஷா இரா.நடராசன் பேசுகையில், மற்ற மொழிகளில் சிறார் இலக்கியம் என்னவிதமான போக்குகளில் எழுதப்படுகின்றன என்பது குறித்து விரிவாக விளக்கினார்.

மலையாள எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், கோவா எழுத்தாளர் ராஜஸ்ரீ ஆகியோர தமிழ்நாட்டில் உருவாகும் புதிய சங்கத்திற்கு தமது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். எழுத்தாளர் ஏ.எஸ், பத்மா சிறாரிடையே உள்ள பல்வேறு அடுக்குகளையும் படைப்புகளில் வெளிப்பர் தேமீம்நாட்டில் உருவாகும் புதிய சிங்கத்திற்கு தமது அடிப்படைகள் குறித்தும் பதிர்ந்துகொண்டார். வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். எழுத்தாளர் ஏ.எஸ். பத்மா சிறாரிடையே உள்ள பல்வேறு அடுக்குகளையும் படைப்புகளில் வெளிப்பட வேண்டிய அடிப்படைகள் குறித்தும் பகிர்ந்துகொண் முனைவர் அருணா ரத்னம், கொ.மா.கோதண்டம், ராமானுஜம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

இணைய வழியே நடந்த இந்த மாநாட்டில் 250க்கும் அதிகமானோர் பங்குபெற்றனர். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இணையவழி சிறார் குழுக்கள், சிறார் செயற்பாட்டாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். சங்கத்தின் நோக்கங்கள் *குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சி சார்ந்து, குறிப்பாகக் கலை, இலக்கிய மேம்பாடு சார்ந்து செயல்படுவது முதன்மையான நோக்கம். அனைத்துக் குழந்தைகளும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் இந்த நோக்கில் எழுத்து, கலை சார்ந்த முயற்சிகளில் சங்கம் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபடுதல்,

குழந்தைகளின் மீது செலுத்தப்படும் வன்முறை, ஒடுக்குமுறை, பாரபட்சமான அணுகுமுறை ஆகியவற்றுக்கு எதிராக எழுத்து, கலை சார்ந்த செயல்பாடுகளில் சங்கம் ஈடுபடுதல் மரபு வரலாறு பொருளியல் அறிவியல், சூழலியல், அரசியல், பண்பாடு, கலைகள் சார்ந்து கடந்த காலம் வெளிப்படுத்தக்கூடிய குழந்தைகளுக்கான சமகாலத்தை கலை. இலக்கியப் படைப்புகளைப் படைப்பது, வாசிப்பது பரவலாக்குவது உள்ளிட்ட முயற்சிகளை முன்னெடுத்தல் ஆகியவை உட்பட குழந்தைகள் நலன் சார்ந்து பல நோக்கங்களை சங்கம் கொண்டுள்ளது.

சங்க செயல்பாடுகளாக திட்டமிடப்பட்டுள்ளவை: குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் கலை இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தருதல், படைப்புக்களைத் தமிழில் இருந்து பிற மொழிக்கும் பிறமொழியில் இருந்து தமிழுக்கும் கொண்டுவருவதில் முனைப்பு. நூலகங்களில் சிறார் புத்தகங்களை கொண்டுசேர்த்தல் *இளம் எழுத்தாளர்களுக்கு பயிலரங்குகள். சிறார் இலக்கிய, கலைப் படைப்புகளுக்கான ஓர் இணையத்தளத்தை சங்கத்தின் சார்பில் உருவாக்கி, நிர்வகித்தல் கல்வியில் கலை இலக்கியத்தை இணைக்க முயற்சி மேற்கொள்ளுதல்” என இடம்பெற்றிருந்தது. 

Also Read:கொரோனா குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget