மேலும் அறிய

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் நிவாரணம் வழங்குக : தமிழ்நாடு அரசுக்கு பாஜக கோரிக்கை

தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் என பாஜக பொதுச் செயலாளர் சி.டி. ரவி கோரிக்கை வைத்துள்ளார்.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடந்த இருதினங்களுக்கு முன்பு கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது.  

 கடந்த 7 ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் பரவலாக கனமழை பதிவாகி உள்ளது.  இந்த கனமழை காரணமாக  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 10 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது. மேலும், சென்னையில் இந்தாண்டு 74 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் நிவாரணம் வழங்குக : தமிழ்நாடு அரசுக்கு பாஜக கோரிக்கை

இந்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த 2015 ம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வடிகால் பாதைகள் மற்றும் தேங்கிய நீர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இருப்பினும் கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்தது. இந்தநிலையில், தமிழத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் என பாஜக பொதுச் செயலாளர் சி.டி. ரவி கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 


மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் நிவாரணம் வழங்குக : தமிழ்நாடு அரசுக்கு பாஜக கோரிக்கை

அதேபோல், 2016-17ஆம் ஆண்டுக்குப் பிறகு பெற்ற பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுபாஜக தமிழக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கனமழையால் பயிர்களை இழந்த விவசாயிகள் மத்திய அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா மூலம் பயனடைவார்கள் என்றும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, மத்திய அரசிடம் விவரங்களை வழங்குவார் என்றார். மேலும், அவரது தலைமையிலான குழு பயிர் இழப்பு குறித்த மதிப்பீட்டை மத்திய அரசிடம் அளித்து தமிழகத்திற்கு நிதி கிடைக்க மாநில பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Embed widget