![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
TN Assembly Session LIVE:நான் வந்ததும் சட்டபேரவையில் கலாட்டா நடந்தது... துரைமுருகன் ஜாலி டாக்!
TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவை நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..
LIVE
![TN Assembly Session LIVE:நான் வந்ததும் சட்டபேரவையில் கலாட்டா நடந்தது... துரைமுருகன் ஜாலி டாக்! TN Assembly Session LIVE:நான் வந்ததும் சட்டபேரவையில் கலாட்டா நடந்தது... துரைமுருகன் ஜாலி டாக்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/0e39f87b4c7fce315874333c917e608a_original.jpg)
Background
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மாணியக் கோரிக்கைமீது விவாதம்
கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
TN Assembly Session LIVE :ஆளுநருடன் விரோதம் இல்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநருடன் விரோதம் இல்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின் https://t.co/wupaoCzH82 | #MKStalin #RNRavi #Tamilnadu #TNPolitics #TNAssembly pic.twitter.com/x5Ca6kJrU3
— ABP Nadu (@abpnadu) April 18, 2022
மின்வெட்டு குறித்த விவாதத்தில் பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி பேச்சு
சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது - மின்வெட்டு குறித்த விவாதத்தில் பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி பேச்சால் பேரவையில் சிரிப்பலை
முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் : அமைச்சர் துரைமுருகன்
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
TN Assembly Session LIVE: முல்லை பெரியாறு விவகாரம் : சட்டபேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக சட்டபேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
நான் வந்ததும் சட்டபேரவையில் கலாட்டா நடந்தது... துரைமுருகன் ஜாலி டாக்!
மருத்துவ விடுப்புக்கு பிறகு பேரவைக்கு வந்த துரைமுருகன் ஜாலியாக பேசியுள்ளார். அதில், நீண்ட நாளா நான் சபையில் இல்லை; ரொம்ப டல் அடிக்குதுன்னு எல்லாரும் சொன்னாங்க, நான் வந்த உடனே ஒரு கலாட்டா நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)