TN Assembly Session LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் தனித் தீர்மானம்
Tamil Nadu Assembly Session LIVE Updates: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
![TN Assembly Session LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் தனித் தீர்மானம் TN Assembly Session LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் தனித் தீர்மானம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/7772f595ef000d2a137a3f7df904c0b31719030352453333_original.jpg)
Background
பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
- இதுபோன்ற குற்றங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல் ஆய்வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுவார். ஆனால் இவ்வழக்குகளில் விசாரணையின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் விசாரணை அலுவலராக காவல் கண்காணிப்பாளரை நியமிப்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
TN Assembly Session LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் தனித் தீர்மானம்
Caste Census Resolution : சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: வீண் விளம்பரம் தேடுவதில் அதிமுகவினர் முனைப்பு: முதல்வர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: வீண் விளம்பரம் தேடுவதில் அதிமுகவினர் முனைப்பு: முதல்வர் ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க தயாராக இருக்கிறது என தெரிவித்து வருகிறேன். மக்கள் பிரச்சனைகளை பேச அவகாசம் அளிக்கப்படும் என தெரிவித்தும், அதிமுக வெளியில் போய் பேசுவது மாண்பல்ல. அதிமுகவினர் விளம்பரம் தேடுகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேச்சு
46,000 அரசுப் பணியிடங்கள் : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
2026 ஜனவரிக்குள் 46,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
"14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
"நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)