![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Swell Surge: பொதுமக்களே உஷார்.. கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட்.. கடலில் நிகழப்போகும் மாற்றம்!
கர்நாடகா, மகாராஷ்ட்ரா பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) விடுத்திருந்தது. அதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![Swell Surge: பொதுமக்களே உஷார்.. கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட்.. கடலில் நிகழப்போகும் மாற்றம்! Swell surge warning to Kerala, South Tamil Nadu high tide conditions can cause coastal flooding Swell Surge: பொதுமக்களே உஷார்.. கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட்.. கடலில் நிகழப்போகும் மாற்றம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/04/49cb04c2216fec617d2949df4d6680781714802592604572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் இன்று கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்றும், கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, “கர்நாடகா, மகாராஷ்ட்ரா பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) விடுத்திருந்தது. அதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகள் ரெட் அலர்ட்டும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கடலோர கிராமங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் கடற்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் சுமார் 1.5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) தெரிவித்துள்ளது. எனவே மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வு நாளை இரவு 11.30 மணி வரை இருக்கும். இது Swell Surge எனப்படும் காற்றின் மாறுபாடு காரணமாக முன்னெச்சரிக்கை இல்லாத கடல் கொந்தளிப்பு என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் இருந்து தூரமாக நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தமிழில் கள்ளக்கடல் விளைவு என்றழைக்கப்படுகிறது. இதனால் சுனாமி ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் கள்ளக்கடல் தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
தென் தமிழகம் மட்டுமின்றி கோவா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களின் கடற்கரை பகுதிகளிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)