மேலும் அறிய

இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்.....அ மைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

மின் – அலுவலகம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வருவாய்துறையை சேர்ந்த 104 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மின் மாவட்ட மேலாளர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட மின்-அலுவலகம் நடைமுறைபடுத்துதல் தொடர்பாக  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் க.கவிதா, அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.


இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்.....அ மைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

கரூர் மாவட்டத்தில் மின் – அலுவலகம் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள் உள்ளிட்ட 61 வெவ்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் 548 அலுவலர்களுக்கு தனியான மின் அஞ்சல் முகவரிகள் உருவாக்கப்பட்டு, அவர்கள் தங்களது மின்னணு கையொப்பம் அளிக்க மின்னணு பயனர் முகவரி (USER ID) உருவாக்கப்பட்டுள்ளது.  மின் – அலுவலகம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வருவாய்துறையை சேர்ந்த 104 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மின் மாவட்ட மேலாளர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு துறை அலுவலர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.  தற்பொது வரை 4472 தபால்கள் மின் – அலுவலகத்தில் வாங்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மின் – அலுவலகத்தில் 2168 கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொடரந்து தினசரி வரப்படும் தபால்களை  மின் – அலுவலகத்தில் பதிவேற்றம் செய்வதற்கு சுழற்சி முறையில் 6  தட்டச்சர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது, மேலும், மின் – அலுவலகம் நடைமுறை படுத்தவதற்கு கூடுதல் தேவைகளை குறித்து  அலுவலர்களிடம்   கேட்டறிந்தனர்.


இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்.....அ மைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசுகையில், முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கைகளால் மின் ஆளுமை திட்டங்களில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் 17வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 2 இடத்தினை அடைந்துள்ளது. மிக விரைவில் முதல் இடம் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சரி சமமான வாழ்க்கைத்தரம் உருவாகியுள்ளது. 


இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்.....அ மைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

தகவல் தொழில்நுட்பத் துறை மூன்று இலக்குகளை கொண்டு செயலாற்றி வருகிறது. இதற்காக இ-சேவை மையங்கள் மேம்படுத்தப்பட்டு, மென்பொருள் தரம் உயர்த்தப்பட்டு, 200க்கும் மேற்பட்ட அரசுத்துறை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 300க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களாக அதிகரிக்கும். காகிதம் இல்லா அலுவலகமாக மின் அலுவலகம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், கோப்புகள் மீது மிக விரைவில் நடவடிக்கை எடுக்கவும், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து விண்ணப்பதாரர் தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும். அரசின் பல்வேறு துறைகளில் உள்ள தரவுகளை ஒருங்கிணைத்து எந்த திட்டத்திற்கு எந்த பயனாளிகள் தகுதியுடையவர்கள் என்பதை சரி பார்க்க முடியும்.


இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்.....அ மைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது அரசை தேடி மக்கள் வருகின்ற நிலை மாறி, 'மக்களை தேடி அரசு திட்டங்கள்' என்ற சூழல் உருவாகும். தமிழகத்தில் "டன் பண்ட்" மூலமாக பைபர் நெட்வொர்க் இணைப்பு வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்ததும் இணைப்பு பிரச்சனை இருக்காது. பல மாவட்டங்களில் இ-சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்களுடைய உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த தொகையை விட அதிகமான கட்டணம் வசூலித்தால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
இனிமேல் அரசு கட்டடங்கள் இப்படித்தான் இருக்கும்! PWD அதிரடி முடிவு!வெளியான முக்கிய தகவல்!
இனிமேல் அரசு கட்டடங்கள் இப்படித்தான் இருக்கும்! PWD அதிரடி முடிவு!வெளியான முக்கிய தகவல்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget