மேலும் அறிய

TN Govt on Sterlite | ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்கக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு..!

700 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி 1 டன் O2 தயாரிக்க முடியும். ஆனால் வேதாந்தா 6300 யூனிட்களைப் பயன்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தயாரிப்பதற்காக தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்க கோரி வேதாந்தா தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு தெரிவித்தது. 2021 ஏப்ரல் மாத இறுதியில், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி அளித்துள்ளது. ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, ஆக்சிஜன் உற்பத்திக்கான ஆலையை மேற்பார்வையிடும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்  அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை உள்ளது, வேதாந்தாவின் ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதற்கு, பல்வேறு சமூக அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவத்தனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமுகச் செயற்பாட்டாளருமான நித்யானந்த் ஜெயராமன் இதுகுறித்து கூறுகையில், "ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த தேவையில்லை எனக் கூறுவது அடிப்படையற்றது. ஏப்ரல் 23 அன்று, தமிழகத்தில் தினம்தோறும் 15,000 கேஸ் இருந்த நிலையில், அரசு உச்ச நீதி மன்றத்தில் உடனடியாக ஆக்சிஜன் தேவை இல்லை என நிலை எடுத்து. ஏப்ரல் மாதத்தில், வேதாந்தா செயல்பட அனுமதிக்கப்பட்டபோது, 2வது அலை அதிகரித்து கொண்டிருந்தது, O2 பற்றாக்குறை கடுமையாக மாறிக்கொண்டிருந்தது.

TN Govt on Sterlite | ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்கக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு..!

இன்று, ஆக்ஸிஜன் கிடைக்கிறது, ஆனால் மின்சாரம் இல்லை. பல மாவட்டங்களில் தினசரி மின்வெட்டுக்களை எதிர்கொள்கின்றன. வேதாந்தா உற்பத்தி செய்யும் ஒவ்வொரு டன் ஆக்ஸிஜனுக்கும் 5600 யூனிட் மின்சாரத்தை  வீணாக்குகிறது. 700 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி 1 டன் O2 தயாரிக்க முடியும். ஆனால் வேதாந்தா 6300 யூனிட்களைப் பயன்படுத்துகிறது.
தினசரி சராசரியாக 30 டன் உற்பத்தி என அடிப்படையில், வேதாந்தா ஒரே நாளில் 168,000 யூனிட்களை வீணாக்குகிறது. இது ஒரு மாதத்திற்கு 1700 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானது. வேதாந்தாவின் குறைந்த செயல்திறன் கொண்ட அலகு இயங்குவதில் அர்த்தமில்லை. உற்பத்தி இடைநிறுத்தப்பட வேண்டும். அலகு ஸ்டாண்ட்-பை முறையில் பராமரிக்கப்பட வேண்டும். அவசர நிலைமை ஏற்பட்டால், அதை மறுதொடக்கம் செய்வதை அரசாங்கம் பரிசீலிக்கலாம்” என்று பதிவிட்டார்.   

தமிழ்நாட்டில், தற்போது 21,207 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 3076 பேர்  மருத்துவ ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் , 1252 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 20% பேர் நிமோனியா எனும் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  முதல் அலையை விட இரண்டாவது அலையில், தீவிர நோய்த் தன்மை காரணமாக ஆக்சிஜன் தேவை  அதிகரித்து காணப்பட்டது.       

மேலும், வாசிக்க: 

ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்' 

தலைப்பு செய்திகள்

TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்.. வந்தது புதிய விதி!
திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்.. வந்தது புதிய விதி!
Kanchipuram New Bus Stand: காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget