”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்தார்.
பட்டாசு ஆலை விபத்து:
குடியரசுத் தலைவர் இரங்கல்:
Saddened to learn about the loss of many lives due to an explosion at a firecracker factory near Sivakasi, Tamil Nadu. I convey my heartfelt condolences to the bereaved families. I pray for speedy recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) May 9, 2024
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம். கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று 195 2024) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/01jGkOjGym
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 9, 2024
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets