மேலும் அறிய
‛பிரிவினைவாதம்... மதவாதம் தொடர்பாக தனிப்பிரிவு வேண்டும்’ -திருமாவளவன் பேட்டி!
‛சாதிய மதவாத வன்முறைகளைத் தூண்டும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி உளவு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்’ -திருமாவளவன்

திருமாவளவன் பேட்டி
சென்னை கொளத்தூரில் தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள் சேகர் பாபு , சா.மு நாசர் , திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன் ;
‛‛பொது துறை வங்கிகளை தனியார் மையப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு பாஜக அரசு அனைத்தும் தனியார் மையபடுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணி செய்து கொண்டு இருக்கிறது. இந்த போக்கு மிகவும் கண்டிக்க தக்கது. வங்கி ஊழியர்களின் போராட்டம் வெல்ல விடுதலை சிறுத்தைகள் துணையாக இருக்கும்.

அரசு பேருந்தில் நரிகுறவர் சமூகத்தை சார்ந்தவர்களை வழுகட்டாயமாக கீழே இறக்கி விட பட்டு இருக்கிறார்கள். 21 ம் நூற்றாண்டில் இத்தகைய கொடுமைகள் தமிழகத்தில் அரங்கேறி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது கடுமையான வேதனையை உருவாக்குகிறது. மாண்புமிகு முதல்வர் இதில் தீவிரம் கவனம் செலுத்த வேண்டும்.
கருத்து சுதந்திரம் என்கிற பேரில் அவதூறுகளைப் பரப்புவது வதந்திகளை பரப்புவது தான் பாஜகவின் அரசியல். இவர்கள் செய்வது அரசியல் நடவடிக்கை அல்ல சமூக விரோத நடவடிக்கை. வன்முறையை தூண்டும் வகையில் வதந்திகளை பரப்பும் பிரிவினைவாத சக்திகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை வதந்தி பரப்புவதற்காக தவறாக பயன்படுத்தும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தேசத்தை எந்த அளவிற்கு மதிக்கிறோமோ அதே அளவிற்கு தாய்மொழியும் மதிக்க வேண்டும். அவரவர் தாய் மொழியை உயர்வாக பேசுவதையும் மதிப்பை கொடுப்பதையும் நாம் பார்க்கிறோம். எனவே தேசிய கீதத்திற்கு கொடுக்கும் அதே மரியாதையை தமிழர்கள் தமிழ் தாய் வாழ்த்துக்கும் கொடுக்கிறார்கள்.
அம்பேத்கர் பிறந்த நாளன்று சாதியவாத மதவாத சக்திகள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளின் வன்முறை அதிகரித்து வருகிறது. எனவே இவற்றை அடக்கும் வகையில் சாதிய மதவாத வன்முறைகளைத் தூண்டும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி உளவு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். காவல் துறையின் சார்பில் பிரிவினை வாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
கல்வி
மதுரை
Advertisement
Advertisement