மேலும் அறிய

School Reopening : பத்தாம் வகுப்புவரை பள்ளிகள் இன்று தொடக்கம்.. “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்..

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

ஒருவாரம் புத்துணர்வு பயிற்சி:

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் ஆரம்பித்தது முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதற்கு அடுத்து இரண்டு ஆண்டுகள் சரியாக பள்ளிகள் சரியாக செயல்படாத நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் வழக்கம் போல பள்ளிகள் இந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே தொடங்கப்படுகின்றன. மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளிலேயே பாட வகுப்புகள் எடுக்காமல் ஒரு வாரத்திற்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வகுப்புகள் தொடங்கப்படும் முதல் ஒருவாரத்திற்கு பாடங்களுக்கு பதில் புத்துணர்வு பயிற்சி, நல்லொழுக்கம், மற்றும் உளவியல் ரீதியிலான வகுப்புகளும் நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஒருவாரத்திற்குப் பிறகு வழக்கமான பாடங்களை நடத்தலாம் என்று பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



School Reopening : பத்தாம் வகுப்புவரை பள்ளிகள் இன்று தொடக்கம்.. “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்..

வழிகாட்டு நெறிமுறைகள்:

பள்ளி வகுப்பறைகள், வளாகங்கள் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.

அதே சமயம், காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையிலான 7 மணி நேரத்தில் 8 பாடவேளைகளாக பிரித்து, அதற்கான அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 2022-23ம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியில் உள்ள நாள்களில், தலா 40 நிமிடங்களுக்கு எட்டு அமர்வுகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டம்:

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு "எண்ணும் எழுத்தும்" என்ற முன்னோடி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். வரும் 2025ம் ஆண்டுக்குள் மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ’இல்லம் தேடி கல்வி’, ‘நான் முதல்வன்’ ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படை கணிதச் செயல்பாடுகளை செய்யும் திற்ன்களையும் பெற்றிருக்க வேண்டும். இதற்காக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் பாடக்கருத்துகளுடன் ஒருங்கிணைத்து கற்பிக்கப்படும்.


School Reopening : பத்தாம் வகுப்புவரை பள்ளிகள் இன்று தொடக்கம்.. “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்..

பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று தொடங்கும் நிலையில், வரும் ஜூன் 20-ம்தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
Embed widget