மேலும் அறிய

MR Vijayabhaskar Arrest: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது - சிபிசிஐடி அதிரடி

MR Vijayabhaskar Arrest:  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி கைது செய்துள்ளனர்.

MR Vijayabhaskar Arrest:  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி கைது செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது:

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் இரண்டு முறை அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து 5 தனிப்படை அமைத்து சிபிசிஐடி போலீசார் அவரை தேடி வந்த நிலையில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர் பிரவீன் ஆகியோரை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, போலி ஆவணங்கள் தயார்த்து சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் என்பவர் உட்பட 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விவரம் என்ன?

கரூர்- மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு தொடர்பாக புகாரளித்தார். அதில்,” வெள்ளியணையை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகள் ஷோபனா, உடன் 4 பேரை அழைத்துக்கொண்டு செட்டில்மென்ட் மூலம் தமது சொத்தை கிரையம் செய்ய சார்பதிவாளர் அலுவலகம் வந்திருந்தார். ஆனால் சொத்து வெள்ளியணை சார்பதிவகத்துக்குட்பட்டது. அதோடு உண்மையான ஆவணத்தையும் அவர்கள் கொண்டுவரவில்லை. இதனால் பத்திரப் பதிவு செய்யாமல் நிலுவையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, உண்மையான ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாகவும், அதுதொடர்பாக வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர். பெற்றுள்ளதாக கூறி அதன் நகலை ஆவணதாரர் சார்பில் 2 பேர் வழங்கினர். மேலும் வெள்ளியணை சார்பதிவகத்தில் இருந்து மதிப்பறிக்கை, வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளார் வழங்கியதாக  'நான்டிரேசபிள்' (ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை) சான்றிதழை சமர்பித்தனர். அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 10ம் தேதி நிலுவையில் இருந்து ஆவணம் விடுவிக்கப்பட்டு, ரூ.100 கோடி மதிப்பிலான அந்த 22 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டது.  ஆனால் ஷோபனாவின் தந்தை பிரகாஷோ, போலி சான்றிதழ்கள் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்துள்ளதாக மறுநாளே என்னிடம் புகாரளித்தார். அதில், தோரணக்கல்பட்டி- குன்னம்பட்டியில் தமக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்” என முகமது அப்துல் காதர் குறிப்பிட்டு இருந்தார்.

விசாரணையில் அம்பலமான உண்மை:

புகார் தொடர்பாக கரூர் மாவட்ட பதிவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் அசல் ஆவணம் காணவில்லை என்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது அம்பலமானது. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான், தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யபட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
ஆபாச படங்களுக்கு அடிமை; மிருகத்தனம்; கொல்கத்தா டாக்டர் வழக்கு குற்றவாளியின் உளவியல் சோதனையில் பகீர்!
ஆபாச படங்களுக்கு அடிமை; மிருகத்தனம்; கொல்கத்தா டாக்டர் வழக்கு குற்றவாளியின் உளவியல் சோதனையில் பகீர்!
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suresh Gopi vs Amit Shah | சுரேஷ் கோபி சர்ச்சை பேச்சு! பறிபோகும் அமைச்சர் பதவி?அதிருப்தியில் அமித்ஷாMamata Letter to Modi : ”15 நாள் தான் Time!”மோடிக்கு மம்தா பரபரப்பு கடிதம் பாலியல் வன்கொடுமை சம்பவம்Murugan Muthamzh Manadu : உலக முத்தமிழ் முருகன் மாநாடு..திமுக அரசு நடத்துவது ஏன்? பணிகள் தீவிரம்Sivaraman Death : EX-NTK சிவராமன் தற்கொலை  அவர் தந்தையும் மரணம்!  சேலத்தில் பரபரப்பு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
Kottukkaali Review : ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா சூரி...கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
ஆஹா! பெண் காவலர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் கலக்கிட்டாரு!
ஆபாச படங்களுக்கு அடிமை; மிருகத்தனம்; கொல்கத்தா டாக்டர் வழக்கு குற்றவாளியின் உளவியல் சோதனையில் பகீர்!
ஆபாச படங்களுக்கு அடிமை; மிருகத்தனம்; கொல்கத்தா டாக்டர் வழக்கு குற்றவாளியின் உளவியல் சோதனையில் பகீர்!
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளி அனுப்பிய தற்கொலை கடிதம்.. உண்மையை போட்டு உடைத்த சீமான்!
Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
Rahul Dravid:நல்ல சம்பளம் கொடுங்கள் நானே நடிக்கிறேன்.. மாஸ் காட்டிய ட்ராவிட்
Rahul Dravid:நல்ல சம்பளம் கொடுங்கள் நானே நடிக்கிறேன்.. மாஸ் காட்டிய ட்ராவிட்
Breaking News LIVE: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு சொந்த ஊர் பணி
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு சொந்த ஊர் பணி
Actor Nakul : நடுராத்திரி ஆணுறை வாங்கிவரச் சொன்னார்.. வாஸ்கோடகாமா பட உதவி இயக்குநர் வேதனை
நடுராத்திரி ஆணுறை வாங்கிவரச் சொன்னார்.. வாஸ்கோடகாமா பட உதவி இயக்குநர் வேதனை
Embed widget