மேலும் அறிய

Republic Day: குடியரசு தின விழா அணிவகுப்பு: காந்தி சிலையில் இருந்து உழைப்பாளர் சிலைக்கு மாற்றம் - ஏன் இந்த முடிவு?

குடியரசு தின விழா அணிவகுப்பு வழக்கத்திற்கு மாறாக காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலைக்கு அருகே நடைபெற உள்ளது.

நாட்டின் குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா நாளை பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றுகிறார்.

குடியரசு தின விழா:

தமிழ்நாட்டில் நாளை கம்பீரமான அணிவகுப்புகளுடனும், கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடனும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் குடியரசு தின விழா வழக்கமாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெறுவது வழக்கம் ஆகும். ஆனால், நடப்பாண்டில் குடியரசு தின விழா அணிவகுப்பு காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

உழைப்பாளர் சிலை:

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“ குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற உள்ளது.

எனவே, பாதுகாப்பு காரணங்களால் 25-ந் தேதி  முதல் 26-ந் தேதி முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்ளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைநிகழ்ச்சிகள்

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் கம்பீரமான அணிவகுப்புகளுடன் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, கடந்த சில வாரங்களாக மெரினா கடற்கரையில் உள்ள சாலையில் ஒத்திகை நடைபெற்று வந்தது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்பட தலைநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறக்கூடாது என்பதற்காக பலத்த கண்காணிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.