மேலும் அறிய

கரூர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு ஒரு லட்சத்து, 953 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பாசன வாய்க்காலில் 1,220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் காலை வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாகவும், மாலையில் வினாடிக்கு 80 ஆயிரம்  கனடியாகவும் அதிகரித்தது. பின்னர் இரவில் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகமானது. காலை வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி உட்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.



கரூர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூரில் இருந்து விடப்பட்ட தண்ணீரின் காரணமாக மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 2 ஆயிரத்து, 173 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு ஒரு லட்சத்து, 953 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பாசன வாய்க்காலில் 1,220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேட்டூர் தண்ணீரால் தற்போது மாயனூர் கதவணை கடல் போல் காட்சியளிக்கிறது.


கரூர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்டம் நொய்யல் மரவாபாளையம், சேமங்கி, பூங்கோடை வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் வழியே சென்று கொண்டிருக்கிறது. இங்கிருந்து காவிரி ஆற்றில் வெள்ள நீர் இரு கரைகளையும் தொட்டபடி திருச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் வருவாய்த்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றுக்குச் சென்று குளிக்கவும், மீன்பிடிக்கவும், நீச்சல் அடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் தண்ணீரை பொதுமக்கள்  பார்த்துச் சென்றனர்.


கரூர் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும், காவிரி ஆற்றில் சேர்ந்து, மாயனூர் கதவணைக்கு வந்து சேர்கிறது. இதனால் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 2,173 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதி குறுவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், ஒரு லட்சத்து, 953 கன அடி தண்ணீரும், நான்கு கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவேரி பாசனப் பகுதிகளில் அடுத்த மாதம், சம்பா சாகுபடி துவங்க உள்ள நிலையில், மாயனூர் கதவனுக்கு மீண்டும் வினாடிக்கு, ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் வரத்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சுடுகாடு பிரச்சினை: கோட்டகுப்பத்தில் மீனவப் பெண்கள் கழுத்தில் கயிறு கட்டி தற்கொலை முயற்சி போராட்டம் - கடலோரக் கிராமத்தில் பெரும் பதற்றம்!
சுடுகாடு பிரச்சினை: கோட்டகுப்பத்தில் மீனவப் பெண்கள் கழுத்தில் கயிறு கட்டி தற்கொலை முயற்சி போராட்டம் - கடலோரக் கிராமத்தில் பெரும் பதற்றம்!
விழுப்புரம்: ஜூன் 10-ல் நாட்டுப் படகுகள் நேரடி ஆய்வு - கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கடும் எச்சரிக்கை!
விழுப்புரம்: ஜூன் 10-ல் நாட்டுப் படகுகள் நேரடி ஆய்வு - கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கடும் எச்சரிக்கை!
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget