மேலும் அறிய

Rajiv Gandhi Case: ”ஆளுநர் ஆர்.என்.ரவி மனிதாபிமானமற்றவர்” - நளினி உள்ளிட்டோர் விடுதலை குறித்து வைகோ

Rajiv Gandhi Case: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி மனசாட்சி, மனிதாபிமானமற்றவர் என வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள  நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, வைகோ கூறியதாவது, ” 30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கு விமோசனம் பிறந்துள்ளது என தெரிவித்தார். மேலும் இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி மனசாட்சி, மனிதாபிமானமற்றவர்" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

பின்னணி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தனு, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மே மாதம் 18-ந் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளனின் விடுதலைக்கு  தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பேரறிவாளன் வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசியல் சட்டத்தின் 161வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த போதிலும் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வந்தார். இந்த சூழலில், உச்சநீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இன்று 6 பேரையும் விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

நளினி உள்பட 6 பேரையும் முன்விடுதலை செய்ய தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன், ஜெயக்குமார், முருகன் ஆகிய 6 பேரையும் விடுதலை ஆக உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

”ஆளுநர் ஆர்.என்.ரவி மனசாட்சி, மனிதாபிமானமற்றவர்”

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியாதவது,  ” 30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கு விமோசனம் பிறந்துள்ளது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி மனசாட்சி, மனிதாபிமானமற்றவர் என குற்றச்சாட்டியுள்ளார். மேலும், இந்த தீர்ப்பானது ஆளுநருடைய அராஜக போக்கிற்கு கிடைத்த சரியான பதிலடி. 7 பேரின் விடுதலைக்கு தாமதம் ஆனதற்கு காரணம் தமிழக ஆளுநர்” தான் என்றார்.

" இவர்களின் 30 ஆண்டுகால வாழ்க்கை மரண இருளிலேயே அழிந்தது. இழந்த போன காலம் திரும்ப வரப்போவதில்லை. இருந்தாலும் இப்போது கிடைத்த இந்த விடுதலை நிம்மதியானது” என வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay on Modi: “செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
“செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
Russia Trade: என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
TVK Vijay: மாஸ் காட்டிய தளபதி! ‘’மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
TVK Vijay: மாஸ் காட்டிய தளபதி! ‘’மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
TVK Maanadu Madurai LIVE: தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக 2-வது மாநில மாநாடு - நேரலையில் காணுங்கள்
TVK Maanadu Madurai LIVE: தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக 2-வது மாநில மாநாடு - நேரலையில் காணுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI
ED raid Dmk ministers : ED வலையில் 3 அமைச்சர்கள்?நெருங்கும் சட்டமன்ற தேர்தல்நெருக்கடி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay on Modi: “செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
“செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
Russia Trade: என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
TVK Vijay: மாஸ் காட்டிய தளபதி! ‘’மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
TVK Vijay: மாஸ் காட்டிய தளபதி! ‘’மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
TVK Maanadu Madurai LIVE: தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக 2-வது மாநில மாநாடு - நேரலையில் காணுங்கள்
TVK Maanadu Madurai LIVE: தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக 2-வது மாநில மாநாடு - நேரலையில் காணுங்கள்
Vijay Speech:
Vijay Speech: "ஸ்டாலின் அங்கிள் வெரி வொர்ஸ்ட் அங்கிள்".. 2026ல் திமுக - தவெக தான் போட்டி!
TVK about PTR: தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் - ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு
தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் - ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு
Vijay Speech: சிங்கம் வேட்டைக்குத்தான் வெளியே வரும்; வேடிக்கை பார்க்க அல்ல- விமர்சனங்களுக்கு சூடாக பதிலளித்த விஜய்!
Vijay Speech: சிங்கம் வேட்டைக்குத்தான் வெளியே வரும்; வேடிக்கை பார்க்க அல்ல- விமர்சனங்களுக்கு சூடாக பதிலளித்த விஜய்!
TNUSRB Notification 2025: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; ரூ.67 ஆயிரம் சம்பளம்- 3,665 பணியிடங்கள், உடனே விண்ணப்பிங்க!
TNUSRB Notification 2025: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; ரூ.67 ஆயிரம் சம்பளம்- 3,665 பணியிடங்கள், உடனே விண்ணப்பிங்க!
Embed widget