மேலும் அறிய

Rain Update: அடுத்த 24 மணிநேரத்தில் எங்கெல்லாம் மழை; முழு விபரம் உள்ளே!

Rain Update: தமிழ்நாடு முழுவதும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தமிழ்நாடே தத்தளித்து வருகிறது.

Rain Update: வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கனமழை குறித்து எச்சரித்திருந்தது. அதில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்கள்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதில் நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை,  திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் பரவாலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக  கன மழையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. 

அதன்படி, தலைநகர் சென்னையில் அதிகாலை மூன்று மணி முதல் கன மழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சென்னை முழுவதும் நடந்து வரும் மழை நீர் வடிகால் பணிகளுக்கான வெட்டப்பட்ட குழிகளிலும் மழை நீர் தேங்கி , பணிகளை விரைவாக முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அதேபோல், செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், செஞ்சி, அம்மம்பட்டு, அனந்த புரம், மேல் மலையனூர் மற்றும் வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பூண்டியில் அமைந்துள்ள சத்திய மூர்த்தி அணைக்கு, தொடர் கனமழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 55 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 265 கன அடியாக வந்து கொண்டு உள்ளது. 

கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஈரோடு, சத்தியமங்கலம்,  கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டம் கோபியில் அதிக மழை பெய்து சாலைகளில் மழை நீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. 

அதேபோல், காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில் தொடர் கன மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

  குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.  அதேபோல், ராமநாத புரம் மாவட்டத்தில் மழை பெய்யும் இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை,  திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget