மேலும் அறிய

இரண்டாவது கணவரின் பாலியல் அத்துமீறல் !! புகாரளித்தும் கைது இல்லை !! தாய் எடுத்த விபரீத முடிவு

15 வயது சிறுமிக்கு அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் - புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தாய் தற்கொலை முயற்சி

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டாவது தந்தை

சென்னை புழல் பகுதியில் வசித்து வரும் 35 வயதுடைய பெண்ணுக்கு , 15 வயதில் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினைகளால் முதல் கணவரை விவாகரத்து செய்த அவர் , கடந்த 2018-ஆம் ஆண்டு பார்ஹத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது குழந்தைகளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் தனது 15 வயது மகளிடம் இரண்டாவது கணவர் பார்ஹத் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சிப்பதை அந்த பெண் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கணவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது குடும்பத்தில் கடும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சிறுமிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து வெளியே தெரிவித்தால் கடத்திச் சென்று கொன்று விடுவேன் என்று பார்ஹத்தின் நண்பர்கள் சிலர் மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த சிறுமியின் தாய், புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைது இல்லை - விஷம் அருந்து தற்கொலைக்கு முயற்சி

புகாரின் அடிப்படையில், கடந்த 4 - ம் தேதி போக்சோ சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பார்ஹத், பிரியா, ஷாம்லி மற்றும் ஜோசப் ஆகிய நால்வர் மீது குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கடந்தும் குற்றம் சாட்டப்பட்ட யாரும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடும் மனவேதனை மற்றும் விரக்திக்கு ஆளான சிறுமியின் தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை உடனடியாக மீட்ட உறவினர்கள், சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் உடனடியாக கைது செய்து சிறுமிக்கு நீதி வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 வயது சிறுமியிடம் தாயின் இரண்டாவது கணவரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

விதிமீறினால் உர உரிமம் ரத்து – விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குநர் அதிரடி எச்சரிக்கை!
விதிமீறினால் உர உரிமம் ரத்து – விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குநர் அதிரடி எச்சரிக்கை!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
வரலாற்றுப் பெருமை: கம்பீரமான திண்டுக்கல் பத்மகிரி மலை வரலாற்று சிறப்புகள்!
வரலாற்றுப் பெருமை: கம்பீரமான திண்டுக்கல் பத்மகிரி மலை வரலாற்று சிறப்புகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
Embed widget