மேலும் அறிய

மனிதர்கள் இல்லை... இனி இயந்திரங்கள்! புதுச்சேரியில் நவீன முறையில் பாதாள சாக்கடை சுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை சார்பில் நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணியை சோதனை முறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி: பாதாள சாக்கடை கால்வாய்களை மனிதர்களை ஈடுபடுத்தாமல் நவீன இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணியை புதுச்சேரி அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக உப்பளம் தொகுதிக்குட்பட்ட அம்பேத்கர் பிரதான சாலையில் சோதனை அடிப்படையில் இந்தப் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை சார்பில், பாதாள சாக்கடை கால்வாய்களை நவீன இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நகரப் பகுதியில் உள்ள உப்பளம் தொகுதிக்குட்பட்ட அம்பேத்கர் பிரதான சாலையில் நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் கலந்து கொண்டு, நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.

6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் திட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். புதுச்சேரியில் பாதாள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்வது சவாலான பணியாக இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் நவீன இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனத்தினர் முதலமைச்சரை சந்தித்து இந்த தொழில்நுட்பம் குறித்து விளக்கமளித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அப்போது, முதற்கட்டமாக சுமார் 6 மாதங்களுக்கு சோதனை முறையில் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நான்கு பிராந்தியங்களுக்கும் தேவையான இயந்திரங்கள் கணக்கீடு

சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான நவீன இயந்திரங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

இதற்காக புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களுக்கும் எத்தனை இயந்திரங்கள் தேவைப்படும் என்பது குறித்து கணக்கெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், சோதனை முறையில் இயந்திரங்களின் செயல்திறன் மற்றும் பயன்பாட்டை ஆய்வு செய்த பின்னர் தேவையான எண்ணிக்கையில் இயந்திரங்களை வாங்க முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மழைக்காலத்தை முன்னிட்டு பாதாள சாக்கடை கால்வாய்களை முறையாக சுத்தம் செய்வதற்கும் இந்த நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் கழிவுநீர் தேக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க, முன்கூட்டியே சுத்தம் செய்யும் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் செயல்திறன் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காண நடவடிக்கை

புதுச்சேரியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக வரும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அதில் தாமும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்திற்கு முன்பாக புதுச்சேரிக்குத் தேவையான குடிநீர் மற்றும் பொதுப்பணித்துறை திட்டங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் டெல்லி சென்று, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிதி உதவிகளை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

டெண்டர் விடப்பட்டு பணிகளை தொடங்க உத்தரவு

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பணிகளை மேற்கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வன், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர்கள் சுந்தரி, ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மனிதர்களை நேரடியாக பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தாமல், நவீன இயந்திரங்களின் உதவியுடன் இந்தப் பணியை மேற்கொள்ளும் புதுச்சேரி அரசின் சோதனை முயற்சி, வெற்றிகரமாக அமைந்தால் நான்கு பிராந்தியங்களிலும் இதே நடைமுறை விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மனிதர்கள் இல்லை... இனி இயந்திரங்கள்! புதுச்சேரியில் நவீன முறையில் பாதாள சாக்கடை சுத்தம்
மனிதர்கள் இல்லை... இனி இயந்திரங்கள்! புதுச்சேரியில் நவீன முறையில் பாதாள சாக்கடை சுத்தம்
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
ஒரே நாளில் 5 ஆயிரம் பனை விதைகள்! நோணாங்குப்பம் ஆற்றங்கரையில் பசுமைப் புரட்சி
ஒரே நாளில் 5 ஆயிரம் பனை விதைகள்! நோணாங்குப்பம் ஆற்றங்கரையில் பசுமைப் புரட்சி
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget