மேலும் அறிய
Puducherry power shutdown: மக்களே உஷார்... ! புதுச்சேரியில் நாளை 03.04.2025 மின் நிறுத்தம்... எந்தெந்த பகுதி தெரியுமா?
புதுச்சேரியில் தொண்டமானத்தம், தேத்தாம்பாக்கம், சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் தடை
Source : freepik
புதுச்சேரி: தொண்டமாநத்தம் துணைமின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 03-04-2025 வியாழக்கிழமை காலை 09.00 மணியிலிருந்து மாலை 06.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தேத்தாம்பாக்கம் இணைப்பு மின்பாதை :
நேரம்: காலை 09.00 மணியிலிருந்து பகல் 12.00 மணி வரை
துத்திபட்டு கிராமம் ஒரு பகுதி, காட்டேரிகுப்பம், லிங்காரெட்டிப்பாளையம், சந்தைபுதுக்குப்பம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் தேத்தாம்பாக்கம், மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும், எனவே பொதுமக்கள் மொபைல் சார்ஜ், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை 9 மணிக்குள் முடித்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதராப்பட்டு இணைப்பு மின்பாதை
நேரம்: பகல் 03.10 மணியிலிருந்து மாலை 06.00 மணி வரை
தொண்டமாநத்தம் ஒரு பகுதி, ராமநாதபுரம் ஒரு பகுதி, உலவைக்கல் ஒரு பகுதி, அகரம், பொறையூர், ஓவுசுடு, உயர்
மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும், எனவே பொதுமக்கள் மொபைல் சார்ஜ், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை 3 மணிக்குள் முடித்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















