மேலும் அறிய

விழுப்புரத்தில் பட்டினியால் இறந்த 5 வயது சிறுவனை அடையாளம் காண கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார்

பட்டினியால் இறந்த 5 வயது சிறுவனை அடையாளம் காண கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்

விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல் தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவர் உள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் நான்கு சக்கர தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடையை அடைத்து வீட்டுக்கு சென்ற சிவகுரு 15 ஆம் தேதி மீண்டும் அடுத்த நாள் வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பார்த்த போது தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் இருந்துள்ளான். அந்த சிறுவன் தூங்குவதாக நினைத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை தட்டி எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் பட்டினியால் இறந்த 5 வயது சிறுவனை அடையாளம் காண கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார்

ஆனால் சிறுவன் அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்து அவர் விழுப்புரம் மேற்கு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துபார்த்ததில் சிறுவன் சடலமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சிறுவனின் புகைப்படத்தை காட்டி விசாரணை மேற்கொண்டதில் அனைவரும் தங்கள் வீட்டு குழந்தை இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இறந்த சிறுவன் அங்கன்வாடி மையங்களில் அரசு வழங்கும் சீருடை அணிந்திருந்தான். அதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,300 அங்கன்வாடி மையங்களுக்கும், சிறுவனின் புகைப்படத்தை போலீசார் அனுப்பினர். ஆனாலும், இறந்த சிறுவன் குறித்த விவரம் தெரியவில்லை. இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

 பிரேத பரிசோதனை அறிக்கை:

இது குறித்து எஸ்.பி., ஸ்ரீநாதா கூறுகையில், 'சிறுவனின் உடற்கூராய்வு முடிவடைந்தது. சிறுவன் கொலை செய்யப்படவில்லை. இயற்கையாக இறந்துள்ளார். சிறுவன் குடலில் உணவு மற்றும் தண்ணீர் இல்லை. இதனால், சிறுவன் 2 நாட்கள் உணவு இல்லாமல் இருந்திருக்கலாம். அதன் காரணமாகவும் அவர் இறந்திருக்க வாய்ப்புள்ளது. முதலில், சிறுவன் யார் என அடையாளம் காணும் கோணத்தில் விசாரித்து வருகிறோம். இதையடுத்து, அவர் இறப்பு குறித்த விபரங்கள் தெரிய வரும் என்றார். மேலும், தற்போது பட்டினியால் இறந்து கிடந்த 5 வயது சிறுவனை அடையாளம் காண கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.