நாளை மின் தடை: உங்கள் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்!
மின் வினியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் வினியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி பின்வரும் மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் நாளை (28.01.2026) புதன்கிழமை மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதன்படி மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் பின்வருமாறு,
கோவை மாவட்டத்தில் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம். யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம, ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தாடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி
கே.என்.ஜி.புதூர், வித்யா காலனி, சாஜ் கார்டன். குனியமுத்தூர், சுந்தராபுரத்தின் ஒரு பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி.ஜி.பாளையம், குமாரபாளையம், மேலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (28.01.2026) மின்தடை பகுதிகள்: பல்லடம் பகுதியைச் சேர்ந்த அண்ணாநகர், சேரன்நகர், தண்ணீர்பந்தல், கரைவலசு தொட்டிபாளையம், கொடுவாய், வினோபா நகர், தெற்கு அவினாசிபாளையம்.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப் சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன் காலனி.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















