மேலும் அறிய

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

கரூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரண்டு நாட்களாக நெரூர் காசி விஸ்வநாதர் ஆலயம் இருள் சூழ்ந்து மின்விளக்குகள் இல்லாமல் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடு

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமம் பகுதியில் ஸ்ரீ சத்குரு சதாசிவ பிரமேந்திராள் சித்தர் ஜீவசாமாதியுடன் கூடிய காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. சதாசிவ பிரமேந்திராள் சித்தர் ஜீவசமாதி அடைந்த இங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பிரமுகர்கள் வந்து சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தியானம் செய்து அவரின் அருள் பெற்று சென்றுள்ளனர்.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆண்டு முழுவதும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை கரூரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

கடந்த 2 தினங்களாக பிரசித்தி பெற்ற இந்த கோவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் இருட்டில் கடவுளை தரிசித்து செல்கின்றனர். இரண்டு தினங்களாக இருள் சூழ்ந்த நிலையில், சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. மின்விளக்குகள் எரியாத காரணத்தால் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

விரைவில் சம்பந்தப்பட்ட மின்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் சேலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆன்மீக பக்தர் ஒருவர் கூறுகையில், நான் பல வருடங்களாக இந்த ஆலயத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் தற்போது மின்சாரம் இல்லை என்று கேள்விப்பட்டவுடன் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது அதற்கான பணிகளை விரைந்து முடிக்க மின் துறைக்கு எனது பணிவான வேண்டுகோள் இந்த தருணத்தில் வைக்கிறேன் என கூறினார்.

பின்னர் இதை தொடர்ந்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில் 50 வருடங்களுக்கு மேல் நான் இந்த ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது் இரண்டு நாட்களாகியும் மின் பணிகள் இன்னும் முடிக்காத நிலை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனினும் மாவட்ட நிர்வாகமும், மின்துறையினரும் விரைந்து புகழ்பெற்ற ஆலயத்திற்கு மின் இணைப்புகளை சரி செய்து வழங்க வேண்டுமெனவும், இந்த ஆலயத்திற்கு தமிழகம், தவிர கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுவாமி தரிசிக்க வருகை புரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் இல்லை என்பதால் சிலர் வருகை தாமதம் ஆகி இருக்கிறது. அதைப்போல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வர இருப்பதால் விரைந்து மின் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்கிட ஆன்மீக பக்தர்களின் சார்பாக கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Power Shutdown: சனிக்கிழமை வீட்டு வேலை வச்சிருக்கீங்களா? - நாளை தமிழகத்தில் நிறைய இடங்களில் மின்தடை; முன்கூட்டியே உஷாராகுங்க
சனிக்கிழமை வீட்டு வேலை வச்சிருக்கீங்களா? - நாளை தமிழகத்தில் நிறைய இடங்களில் மின்தடை; முன்கூட்டியே உஷாராகுங்க
ஆட்டத்தை தொடங்கிய முதல்வர் விஜய்; லஞ்சம் வாங்கியதாக புகாரில் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு - அடுத்து என்ன நடக்கும்?
ஆட்டத்தை தொடங்கிய முதல்வர் விஜய்; லஞ்சம் வாங்கியதாக புகாரில் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு - அடுத்து என்ன நடக்கும்?
மிகக் கனமழை எச்சரிக்கை - தமிழகத்தின் 4 மாவட்டங்களு ஆரஞ்சு அலர்ட் - மற்ற மாவட்டங்களின் நிலவரம் என்ன?
மிகக் கனமழை எச்சரிக்கை - தமிழகத்தின் 4 மாவட்டங்களு ஆரஞ்சு அலர்ட் - மற்ற மாவட்டங்களின் நிலவரம் என்ன?
ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...
ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget