மேலும் அறிய

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

கரூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரண்டு நாட்களாக நெரூர் காசி விஸ்வநாதர் ஆலயம் இருள் சூழ்ந்து மின்விளக்குகள் இல்லாமல் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடு

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமம் பகுதியில் ஸ்ரீ சத்குரு சதாசிவ பிரமேந்திராள் சித்தர் ஜீவசாமாதியுடன் கூடிய காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. சதாசிவ பிரமேந்திராள் சித்தர் ஜீவசமாதி அடைந்த இங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பிரமுகர்கள் வந்து சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தியானம் செய்து அவரின் அருள் பெற்று சென்றுள்ளனர்.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆண்டு முழுவதும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை கரூரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

கடந்த 2 தினங்களாக பிரசித்தி பெற்ற இந்த கோவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் இருட்டில் கடவுளை தரிசித்து செல்கின்றனர். இரண்டு தினங்களாக இருள் சூழ்ந்த நிலையில், சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. மின்விளக்குகள் எரியாத காரணத்தால் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மின் இணைப்பு இல்லாத ஜீவசமாதி - ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் வந்து சென்ற தலம்

விரைவில் சம்பந்தப்பட்ட மின்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் சேலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆன்மீக பக்தர் ஒருவர் கூறுகையில், நான் பல வருடங்களாக இந்த ஆலயத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் தற்போது மின்சாரம் இல்லை என்று கேள்விப்பட்டவுடன் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது அதற்கான பணிகளை விரைந்து முடிக்க மின் துறைக்கு எனது பணிவான வேண்டுகோள் இந்த தருணத்தில் வைக்கிறேன் என கூறினார்.

பின்னர் இதை தொடர்ந்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில் 50 வருடங்களுக்கு மேல் நான் இந்த ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது் இரண்டு நாட்களாகியும் மின் பணிகள் இன்னும் முடிக்காத நிலை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனினும் மாவட்ட நிர்வாகமும், மின்துறையினரும் விரைந்து புகழ்பெற்ற ஆலயத்திற்கு மின் இணைப்புகளை சரி செய்து வழங்க வேண்டுமெனவும், இந்த ஆலயத்திற்கு தமிழகம், தவிர கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுவாமி தரிசிக்க வருகை புரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் இல்லை என்பதால் சிலர் வருகை தாமதம் ஆகி இருக்கிறது. அதைப்போல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வர இருப்பதால் விரைந்து மின் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்கிட ஆன்மீக பக்தர்களின் சார்பாக கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
ஜூலை 16 முக்கிய அறிவிப்பு: நாளை இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது! முழு லிஸ்ட் இதோ!
ஜூலை 16 முக்கிய அறிவிப்பு: நாளை இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது! முழு லிஸ்ட் இதோ!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
Embed widget