pongal 2022 | 10 ஆண்டுகளுக்கு பிறகு உசிலம்பட்டியில் நடந்த கிடா முட்டு போட்டி
’’இது போன்ற போட்டிகள் நாட்டு இனங்களை அதிகப்படுத்தும். இதனால் விவாசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்கள் மேம்படும்” என கிராம மக்கள் தெரிவித்தனர்’’

தென் மாவாட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளைப் போல மாட்டுவண்டி பந்தையம், சேவல் சண்டை, கிடா முட்டு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் கிடா முட்டு போட்டி அரசு அனுமதியுடன் நடைபெற்றுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஜோடிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
மதுரை: உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடா முட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பார்வையாளர்களும் கண்டு ரசித்தனர். #Abpnadu | #GOAT | #jallikattu | #Pongal2022 | #madurai | #pongalfestivel | #usilampatti | @SRajaJourno pic.twitter.com/IlNcEd2zdY
— Arunchinna (@iamarunchinna) January 22, 2022






















