மேலும் அறிய

Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?

Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி மற்றும் திண்டுக்கல் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ள 3ஆயிரத்து 649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வழிச்சாலை திட்டப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எனவே வருகிற மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவுப்படுத்தப்படும் நெடுஞ்சாலைத்திட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்ட நெரிசல் காரணமாக நீண்ட நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனையடுத்து புதிய புதிய சாலை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட இடத்திற்கு உடனடியாக சென்று சேர வழிவகை செய்யப்படுகிறது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ், பொள்ளாச்சியில் ஆச்சிபட்டியில் தொடங்கி திண்டுக்கல் கமலாபுரத்தில் நிறைவடையும் வகையில் நான்கு வழிச்சாலை திட்டமானது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.

131.96 கி.மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை திட்டம்

சுமார் 7ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது.  மொத்தமாக 131.96 கி.மீ. துாரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 3ஆயிரத்து 649 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையில், ஒட்டன்சத்திரம் கமலாபுரம் இடையே 36.51 கி.மீட்டருக்கும், மடத்துக்குளம் ஒட்டன்சத்திரம் இடையே 45.38 கி.மீ தூரத்திற்கும், பொள்ளாச்சி- மடத்துக்குளம் இடையே 50.07 கி.மீ. தூரத்திற்கும் அமையவுள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகள் அதாவது சுமார் 80 சதவிகித வழித்தடம் புறவழிச்சாலையாக அமைக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியானது முடிவடைந்து பெரும்பாலன பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டது.மேலும் இந்த வழிசாலையில் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் தென்னை மரங்கள் இருப்பதால் அதனை வெட்டி அகற்றும் பணியானது ஒரு பக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில், மேம்பாலம் கட்டப்பட்டு சர்வீஸ் ரோடு அமைக்கப்படும் பணியானது விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவை மற்றும் பொள்ளாச்சி மக்கள் பெரிதும் பயன் அடையும் வகையில், சர்வீஸ் ரோடு வழியாக பாலத்தின் கீழே சுற்றிச் செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.

3 மாத காலத்தில் முடியும் நெடுஞ்சாலை திட்டம்

இந்த நான்கு வழிச்சாலையை கோவை சாலையுடன் இணைக்க கான்கிரீட் பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புளியம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி,  பகுதிகளில் பாலம் பணிகள் மட்டும் நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இப்பணிகள் அடுத்த 3 மாத காலத்திற்குள் நிறைவடைந்து மே மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

 

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget