மேலும் அறிய

Lockdown | நாளை முதல் தேவையின்றி வெளியே சுற்றினால் சட்டப்படி நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை முதல் தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 297 நபர்கள் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இன்று மாலை சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுளளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Lockdown | நாளை முதல் தேவையின்றி வெளியே சுற்றினால் சட்டப்படி நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

இந்த நிலையில்,  தமிழக காவல்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ”கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்களை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும், கொரோனா பரவாமல் இருக்க முககவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10-ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் கடந்த நான்கு நாட்களாக ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வந்துள்ளனர். இந்த அறிவுரைகளை பொதுமக்கள் சிலர் சரியாகவும், ஒழுங்காகவும் பின்பற்றாததால் கொடிய தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.


Lockdown | நாளை முதல் தேவையின்றி வெளியே சுற்றினால் சட்டப்படி நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி, கொரோனா தீவிரமாக பரவி வரும் இந்த காலத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதில் இருந்து பொதுமக்கள் தங்களை தவிர்த்து கொள்ளும்படி தமிழக காவல்துறை கேட்டுக்கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sivapriyan Interview | Jothimani | ’’மோடி பற்றி பேசினால்..விஜயபாஸ்கருக்கு சிறை தான்’’ ஜோதிமணி ATTACKH Raja speech | ’’ஸ்டாலின் உயிரை காப்பாற்றியவர் மோடி’’ உடைத்து பேசிய ஹெச்.ராஜாSelvaperunthagai Speech | ’’மோடி சொன்னாரு..எடப்பாடி முடிச்சாரு’’செல்வப்பெருந்தகை விளாசல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
"அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
Embed widget