மேலும் அறிய

மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!

‘பொம்பள பூசாரியா இருக்கக்கூடாதா என்னன்னு ? நானே எனக்கு ஊக்கம் குடுத்துக்கிட்டேன் என்கிறார்..

’தமிழ்நாட்டில் உள்ள  கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக சட்டப்படி அடுத்த நூறு நாள்களில் பணி நியமனம் வழங்கப்படும் . இனிவரும் காலங்களில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை அரசு உறுதி செய்யும்” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் தெரிவித்தார்.
 


மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!
 
அதே போல பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பற்றாக்குறை உள்ள இடங்களில் பெண்கள் அர்ச்சகராக நியக்கமிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். இப்படியான அறிவிப்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி பகுதியில்  பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கோயிலில்  பூசாரியாக இருக்கும் பின்னியக்காள் குறித்து விசாரிக்க அவர் வசிக்கும் உசிலம்பட்டி அடுத்த நல்லுத்தேவன்பட்டி  கிராமத்திற்கு சென்றோம். அள்ளி முடிஞ்ச கொண்டையில், தொங்கு காது அமைப்பில், மூக்குத்தி, காப்பு என  உசிலம்பட்டி மண்ணைச் சேர்ந்த பெண்ணாய் நம்மை வரவேற்றார். " வாங்கப்பே..., டீ தண்ணி குடிக்கிறீகளா. மோரூ...கீரு.., குடிக்கிறீகளா’  என்று அன்பான உபசரிப்புக்கு பின் நம்மிடம் பேசினார்.
 
 

மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!
’லிங்கநாயக்கன்பட்டிலதே நாங்க வணங்குற துர்க்கையம்மன் கோயில் இருக்கு. இந்த கோயில்லதே 10 தலைமொறைக்கு மேல பூசாரியா கொண்டு செலுத்துறோ. எங்க தாத்தெ, பூட்டெ, சியான், அப்பா எல்லாருக்கும் பூசாரி பின்னுத்தேவன்னு பேருக வரும். அதுமாதிரிதே. எங்க அப்பு எனக்கு  ’பின்னியக்காள்’னு பேரு வச்சாரு. பல வருசமா ஆம்பளை பிள்ளைகள வச்சு கொண்டு செலுத்துன எங்க பரம்பரையில எங்க அப்பாக்கு நான் ஒரே பிள்ளை பொம்பளபிள்ளையா பிறந்தே. ஆனா எங்க அப்பாரு என்னைய ஆம்பளை மாதிரி தாட்டியமா வளத்தாரு. எனக்கு வெவரம் தெரியிறதுக்கு முன்னாடி இருந்தே  என்னை கோயில் படிவாசலுக்கு கூட்டியாந்துட்டாரு. அதுனால இந்த ’துர்க அம்மன்’ ரத்தத்தோட கலந்துருச்சு. எங்க கோயில் முறைபூரா அத்துப்புடி. வருசத்துல பொரட்டாசி மாசம் மூணாவது வெள்ளிக் கிழமை திருவிழா சாட்டுவோம். அம்மனுக்கு பழம் தேங்கா, படயல் போட்டு பெட்டி தூக்கியாந்து பொங்க வச்சு சாமி கும்புடுவோம். எங்க கோயில்ல திருநீறு வாங்குனா கஷ்டமெல்லாம் அத்துப்போய்ரும். எட்டா கொழைய எட்டி கொடுக்கும். மண்டைக்கு பத்து போடாம காப்பாத்தியாரும். அதே மாதிரி தப்பு செய்றவங்கல கொலை அறுத்துரும்னு தப்பு, தண்டாக்காரங்க பயப்புடுவாங்க. அந்த அளவுக்கு துடியான தெய்வம்.
 

மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!
 
 
இப்படி இருக்கையில எங்க அப்பா பூசாரித்தனம் பாத்துவந்தாரு. நல்லா இருந்தவருக்கு முடங்குணது கணக்கா ஒடம்பு சரியில்லாம போச்சு. எங்கப்பாக்கு நான் மட்டுந்தே வாரிசுனு ஆராத்தி தட்ட கையில எடுத்தேன். எங்க அப்பா திருநீறு போட்டு நல்லபடியா பூசாரித்தனத்த கொண்டு செலுத்துடானு கெட்டியா தைரியம் கொடுத்தாரு. நானும் கெட்டிக்காரத்தனமா சாமிய கொண்டு செலுத்துனேன். ஆனா ரெண்டாம் பங்காளி, மூணாம் பங்காளிக  "எப்புடி பொம்பள பிள்ளை பூச பண்றது. அதலாம் வேணாம்”னு என்னை ஒதுக்குனாங்க. ஆனா நான் விடல எங்க  அப்பா என்ட குடுத்த விபூதி வீண் போகக்கூடாதுனு எல்லா எடமும் ஏறி இறங்குனேன். ‘பொம்பள பூசாரியா இருக்கக் கூடாதா என்னன்னு ? நானே எனக்கு ஊக்கம் குடுத்துக்கிட்டேன். எல்லா டாக்குமெண்டும் எனக்கு சரியா இருந்ததால என்னைய ஜட்ஜு.., அய்யாவே பூச செய்ய சொல்லிட்டாரு.

மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!
 
ஆனாலும் என்னை மறைமுகமாக எதுத்தவங்க   சொத்த பறிச்ச கணக்கா பூச செய்யவிடல. மறுபடியும் கோர்ட்டுக்கு போயி போலீஸ் பாதுகாப்பு கேட்டு வாங்குனேன். அதுக்கப்பறம் யாரும் என்னை எதிர்த்துக்கிட்டு வரல. எல்லா மக்களும் நல்லபடியா சாமி கும்பிட்டுக்கிட்டு போறாங்க. எனக்கு துரோகம் நினைச்சவங்கள கூட நான் தள்ளி நில்லுனு சொல்லல. சொல்லவும் மாட்டேன்.  மலை, மலையா வா..,னு நல்ல வாக்குதேன் சொல்றேன். நான் அம்மனுக்கு பூச செய்ய அம்புட்டு தடங்கல் வந்துச்சு. ஊரையே எதிர்த்து நின்னேன். அதுல கொஞ்ச பேரு சப்போட்டும், பண்ணாங்க. வடிக்காத கண்ணீரு இல்ல. வேற ஒருத்தியா இருந்தா ஓடி போயிருப்பாங்க. நான் வடிச்ச கண்ணீருக்கு துர்கை நல்ல வழிய கொடுத்தா. இப்ப நல்ல படியாக சாமிய கும்பிட்டு திருநீறு எடுத்துக்குடுக்கிறேன். தற்போதைய தமிழ்நாட்டு அரசாங்கம் பொறுப்பேத்துக்கிட்ட பின்னாடி பெண்களுக்கு முன்னுரிமை கிடைச்சுக்கிட்டு இருக்கு. அதே மாதிரி கோயில்களையும் பெண்கள் வந்துட்டா எந்த வேத்துமையும் இல்லாம இருக்கும்" என்றார் மகிழ்ச்சியாக.
 
 
மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!
 
மேலும் பின்னியக்காளுக்கு சட்ட போராட்டத்திற்கு உதவிய வழக்கறிஞர் முரளிதரனிடம் பேசினோம்..," பின்னியக்காளிடம் எல்லா தரப்பு நியாயம் இருந்தாலும் தாசில்தார், ஆர்.டி.ஓ உள்ளிட்டோர் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தது. உள்ளூர் மக்களின் சிலரின் பேச்சைக் கேட்டு முடிவெடுத்தனர். அதனை தொடர்ந்து கீழமை நீதிமன்றங்கள் மூலம் நியாயத்தை பெற்றோம். ஆனால் பின்னியக்காளை ஒதுக்கியே சிலர் பூஜை செய்தனர்.

மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!
 
பின்னர் உயர்நீதிமன்றத்தின் மூலம் நியாயமான தீர்ப்பை பெற்று அவருக்கு காவல்துறையின் பாதுகாப்பை பெற்றோம். அதனால் தொடர்ந்து  காவல்துறையின் பாதுகாப்பில் பூஜை செய்துவருகிறார். ஊர் மக்களும் அவரிடம் விரோதம் இல்லாமல் சாமி கும்பிட்டு செல்கின்றனர். காவலர் பால்பாண்டி தற்போது பாதுகாப்பு பணியில் உள்ளார். ஊரடங்கு நேரம் என்பதால் அதிகமான பக்தர்கள் அனுமதிக்காமல் பின்னியக்காள் மட்டும் பூஜை செய்துவருகிறார். பின்னியக்காளின் வெற்றி பலருக்கும் முன் உதாரணம். அதேபோல் பெண்கள் அர்ச்சகராக மாற்றும் அறிவிப்பு வரவேற்கக்கூடியது" என்றார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Press Meet | ’’நெல்லை ’கதாநாயகன்’ வாக்குப்பதிவு மோசடிகள்’’ ஜெயக்குமார் பகீர் புகார்Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
Embed widget