மேலும் அறிய

Periyar Quotes: ”அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை” : பெரியாரின் பொன்மொழிகள்

Periyar Quotes in Tamil: ஈ.வெ.ராமசாமி எனும் பெரியார் தனது சமூக சீர்திருத்த பணியின் போது கூறிய பொன்மொழிகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Periyar Quotes: ஈரோடு மாவட்டத்தில், 1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்த வெ. ராமசாமி எனும் சமூகநீதி நாயகன் தனது சமூக சீர்திருத்த பயணத்தில் கூறிய மிகவும் முக்கியமான பொன் மொழிகளை அவரது 144வது பிறந்த நாளான இன்று காணலாம். 

 

* விதி என்பது மிதிக்கப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் கொதித்து எழாமல் இருக்க உண்டாக்கப்பட்ட சதியாகும்!

* யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொல்லி இருந்தாலும் உனது புத்தில்லும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!

* கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பறப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. கடவுளை மற! மனிதனை நினை!

* திருமணம் என்பது வயது வந்த, அறிவு வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தபட்ட கரியமே தவிர மற்ற யாருக்கும் வேறு எதற்கும் கட்டுப்பட்டதல்ல!

* எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரை பார்த்ததுகூட இல்லைங்க!

* பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்கமான வாழ்வு!

 * உன் சாஸ்த்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது; அதை சிந்தி!

* பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணையமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்!

* கல்வி அறிவும், சுயமரியாதையும், பகுத்தறிவும் தான் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்!

* விதியை நம்பி மதியை இழக்காதே!

* ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறாரோ, அதேபோல் தான் பிறரிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதே ஒழுக்கமாகும்!

* பெண்களுக்கு சொத்துரிமை இல்லை என்பது பெண்கள் முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பதோடு, பொதுவாக இந்து சமூக முன்னேற்றத்திற்கே கேடாயும் இருக்கிறது!

*  முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான்  ஜனநாயகம்!

* ஒரு புலி இன்னொரு புலியைக் கொல்வதில்லை, ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தைக் கொல்வதில்லை ஆனால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்கிறான் எனவே மனிதன் தான் மிகவும் அபாயகரமானவன்!

* ஒரு நாடு சுபிட்சத்துடன் இருக்க வேண்டுமானால், அந்த நாட்டின் மக்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்! 

* தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்!

*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவருடன் போராடுவது கடினமான காரியம்! 

* மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்!

* எந்த மனிதனும் எனக்கு மேலானவன் இல்லை, அதேபோல் எனக்கு கீழானவனும் இல்லை!

*  பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து!

* நான்கு ஆண்கள், ஒரு பெண் இருக்கும் குடும்பத்தில், முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்!

* உன்னை யோசிக்க வைப்பதுதான் என்னுடைய நோக்கமே தவிர, என்னைப் பின்பற்று உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல, நீ நீயாகவே இரு!

* மனிதன் பெண்ணை தன்னுடைய சொத்தாக நினைக்கிறனே தவிர, தன்னைப்போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிராக மதிப்பதில்லை!

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Minister on Buses: பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
மதுரை மேயர் மாற்றம்? அமைச்சர்கள் பிடிஆர் மூர்த்தி இடையே பனிப்போர்- களத்தில் இறங்கிய முதல்வர்!
மதுரை மேயர் மாற்றம்? அமைச்சர்கள் பிடிஆர் மூர்த்தி இடையே பனிப்போர்- களத்தில் இறங்கிய முதல்வர்!
Embed widget