மேலும் அறிய

30 நாட்களுக்குள் பட்டா! இனி பட்டா வாங்குவது ரொம்ப ஈசி! புதிய முறையை அறிமுகப்படுத்திய அரசு..

நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துகளை இ-சேவை மையம் மூலமோ அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்கிற இணையத்தளம் மூலம் நேரடியாக விண்ணபிக்கலாம்.

பட்டா விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் புதிய முறையை அரசு பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது பொது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

30 நாட்களுக்குள் பட்டா:

இந்த நிலையில் நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துகளை இ-சேவை மையம் மூலமோ அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்கிற இணையத்தளம் மூலம் நேரடியாக விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உட்பிரிவு தேவையற்ற பட்டா மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

புதிய முறை எப்படி:

இது குறித்து   தமிழ்நாடு அரசின் நில அளவைத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி கூறும்போது, ‘தமிழக அரசின் உத்தரவுப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படுகிறது. சில சொத்துகளில் வில்லங்கம் மற்றும் கோர்ட்டில் வழக்கு இருந்தால் மட்டுமே அதில் தாமதம் ஏற்படும். அதேபோல் பட்டா மனுக்கள் மீதும் வரிசையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்த காலதாமதமும் கிடையாது, அப்படி காலதாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.  

பட்டா வாங்க படும் பாடு:

நமது சொந்த நிலத்திற்கு பட்டா வாங்குவது என்பது கடந்த காலங்களில் மிகவும் சிரமமாக இருந்து வந்தது. இதனால் அரசு அதிகாரிகள் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வந்தது, 

இதனை குறைக்கும் வகையில் தமிழக அரசு பட்டா, சிட்டா போன்றவற்றை ஆன்லைனில் கொண்டுவந்து நிலங்கள், பட்டா வாங்குவதற்கான வழிகளை மிகவும் எளிமைப்படுத்தி உள்ளது. இதுமட்டுமில்லாமல் நிலம், உட்பிரிவு செய்ய வேண்டியது இல்லாத சொத்துக்களுக்கு ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிட பட்டா என்கிற உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது ஆனால் அதில் நிலத்தை விற்பவர் பெயரில் பட்டா இருக்க வேண்டும். அதனால் சொத்தை வாங்குபவர்கள் நிலம்/சொத்தானது விற்பவரின் பெயரில் பட்டாவானது இருப்பது என்பதை உறுதி செய்ய வேண்டும் என பத்திரப்பதிவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 8,40,913 பட்டாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

பழைய முறையில் எப்படி?

முன்பு எல்லாம் சர்வேயர்கல் மாதத்திற்கு 30 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 80 என்கிற அளவில் வேகமாக நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டு வருகிறது. 

ஆனால் அதிகாரிகள் சுணக்கமாக செயல்படுவதால பல இடங்களில் பட்டா தாமதமாக வருவதாகவும் பொதுமக்களிடம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பொதுமக்கள் விண்ணப்பம் செய்த  தேதியின் அடிப்படையில் சர்வேயர் அதை வரிசை வாரியாகத்தாக ஆய்வு செய்ய வேண்டும் என அரசு கொண்டுள்ள இந்த புதிய செயல்பாட்டால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோட் சூட்டில் இருந்து பட்டு வேஷ்டிக்கு மாறிய விஜய்.! தலைமைச்செயலகத்திற்கு திடீர் விசிட்- இது தான் காரணமாம்..
கோட் சூட்டில் இருந்து பட்டு வேஷ்டிக்கு மாறிய விஜய்.! தலைமைச்செயலகத்திற்கு திடீர் விசிட்- இது தான் காரணமாம்..
தொகுதிக்குத் தேவையானதை என்னிடம் கேளுங்கள், செய்து தருகிறேன்: மயிலம் மக்களிடம் சி.வி.சண்முகம் உறுதி!
தொகுதிக்குத் தேவையானதை என்னிடம் கேளுங்கள், செய்து தருகிறேன்: மயிலம் மக்களிடம் சி.வி.சண்முகம் உறுதி!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
குறுவை சாகுபடி நேரத்தில் உரம் விலை உயர்வால் விவசாயிகள் பாதிப்பு: அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
குறுவை சாகுபடி நேரத்தில் உரம் விலை உயர்வால் விவசாயிகள் பாதிப்பு: அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
Top 10 News Headlines: “தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
“தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
கோட் சூட்டில் இருந்து பட்டு வேஷ்டிக்கு மாறிய விஜய்.! தலைமைச்செயலகத்திற்கு திடீர் விசிட்- இது தான் காரணமாம்..
கோட் சூட்டில் இருந்து பட்டு வேஷ்டிக்கு மாறிய விஜய்.! தலைமைச்செயலகத்திற்கு திடீர் விசிட்- இது தான் காரணமாம்..
Gold Silver Rate May 29th: போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
Embed widget