மேலும் அறிய

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படும் பல்லவர் கால சிலைகள்..

விழுப்புரம் மாவட்டத்தில் தொடந்து கண்டெடுக்கப்படும் பல்லவர் கல சிலைகள் மற்றும் உறைகிணறுகள் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் அருகே உள்ளது பிடாகம் குச்சிப்பாளையம் கிராமம். இப்பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவர் அளித்த தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் களஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் சிறியதும் பெரியதுமான உறைகிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டன.


விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படும் பல்லவர் கால சிலைகள்..

இதுபற்றி செங்குட்டுவன் கூறியதாவது:-

பிடாகம் குச்சிப்பாளையம் எல்லைக்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றில் களஆய்வு செய்தோம். அப்போது அளவில் சிறியதான உறை  கிணறு இருப்பதை கண்டறிந்தோம். 6 அடுக்குகளுடன் காணப்படும் இந்த உறை   கிணறு சங்க காலத்தை சேர்ந்ததாகும். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கோடை காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்கவும், தெளிய வைத்து தண்ணீரை அருந்தவும் நீர்நிலை பகுதிகளில் உறை கிணறுகளை மக்கள் ஏற்படுத்தினர்.

மேலும் இதுபோன்ற சிறியதும் பெரியதுமான பல உறைகிணறுகள் இப்பகுதி தென்பெண்ணை ஆற்றில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இப்பகுதியில் சங்ககால பொதுமக்கள் பயன்படுத்திய சுடுமண் குழாய்கள், மண்ணால் ஆன விளையாட்டு கருவிகள் மற்றும் அம்மி போன்ற புழங்குப்பொருட்களும் கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் அவ்வப்போது கண்டறியப்பட்டு வருகின்றன.


விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படும் பல்லவர் கால சிலைகள்..

எனவே இப்பகுதி மக்கள் வாழ்விடமாக இருந்து பின்னர் அழிந்திருக்க வேண்டும். பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள உறைகிணறுகளை பாதுகாப்பதற்கு தமிழக அரசின் தொல்லியல் துறையும், விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழழகன், விஷ்ணுபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு:-

விழுப்புரம் அருகே கப்பூர் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் சோழர்கால கல்வெட்டை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் த.ரமேஷ், விழுப்புரம் கணிப்பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:- ஊரின் வடக்கே செய்தருளி ஈஸ்வரர் என்னும் பழமையான சிவன் கோவில் கருவறையின் தென்கிழக்கு பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனின் இரண்டாம் ஆட்சி ஆண்டான கி.பி. 1,072-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இவ்வூரை கப்பூர் என்றும், இங்குள்ள இறைவனை செய்தருளு நாயனார் என்றும் அழைக்கிறது.


விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படும் பல்லவர் கால சிலைகள்..

மேலும் இங்கே சந்தி விளக்கு எரிப்பதற்கு 3 பசுக்களை தானமாக இக்கோவிலை நிர்வகித்த நேராபிராணன் என்பவனிடம் வழங்கியதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றில் இருந்து இவ்வூர் சோழர் காலத்தில் இருந்து கப்பூர் என்று வழங்கப்பட்டதை அறிகிறோம். இக்கோவிலில் பல்லவர் காலத்திய 2 விஷ்ணு சிற்பங்களும் ஒரு விநாயகர் சிற்பமும் மீசையுடன் கூடிய லகுலீசர் சிற்பமும் வரலாற்று சிறப்புமிக்கவை.

எனவே பல்லவர் காலத்திலேயே இவ்வூரில் ஒரு சிவன் கோவில் இருந்து பின்பு சோழர் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோவிலின் அதிட்டானம் மட்டும் கருங்கல்லை கொண்டும் மற்ற பகுதிகள் செங்கலை கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் தற்போது மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறையினர் பராமரிக்க வேண்டும்” என அவர்கள் கூறினர்.

தலைப்பு செய்திகள்

தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
Theni power cut: தேனியில் நாளை (10-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தேனியில் நாளை (10-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget