மேலும் அறிய

ஒன்றரை வருடமாக சம்பளம் தரவில்லை.. ஆர்ப்பாட்டத்தில் குதித்த ரஜினியின் அஷ்ரம பள்ளி ஊழியர்கள்!

லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரம் பள்ளி செயல்பட்டு வருகிறது, இதை லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். இந்த பள்ளி குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவருவது வழக்கம். கடந்த வருடம், லதா நடத்தும் ஆஸ்ரம் பள்ளி காலி செய்வது தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ரூபாய் 1.99 கோடி வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு, அதற்கு லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் தந்து, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்னொரு புகார் ஒன்று ஆஷ்ரமம் குறித்து கிளம்பி உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒன்றரை வருடமாக சம்பளம் தரவில்லை.. ஆர்ப்பாட்டத்தில் குதித்த ரஜினியின் அஷ்ரம பள்ளி ஊழியர்கள்!

சென்னை வேளச்சேரியில் ரஜினிகாந்தின் ஆஷ்ரம பள்ளி இயங்கி வருகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடகாலமாகவே ஊதியம் வழங்கவில்லை என் புகார் எழுந்துள்ளது. அதனால், பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள்  பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர்கள், "கொரொனோ காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியத்தை வழங்காமல் பள்ளி நிர்வாகம் எங்களை வஞ்சிக்கிறது. சம்பளத்தை பற்றி கேட்டாலே இழுத்தடிக்கிறார்கள்.நாங்கள் வருமானம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகிறோம். அதனால், நாங்கள் படும் கஷ்டத்தை மனதில் கொண்டு, ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையும் எங்களுக்கு இதுவரை வந்து சேரவில்லை. அதை பற்றி கேட்டாலும் உரிய பதில் எங்களுக்கு கிடைப்பதில்லை." என்று பள்ளி ஊழியர்கள் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினர்.

இதேபோல்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பும் பிரச்சனை ஏற்பட்டது. நான்கு வருடங்களுக்கு முன்பு, சம்பளம் தரவில்லை என்று ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதாக சொல்லி, பள்ளியின் வாகன ஓட்டுனர்கள் பள்ளி வாகனங்களை இயக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றரை வருடமாக சம்பளம் தரவில்லை.. ஆர்ப்பாட்டத்தில் குதித்த ரஜினியின் அஷ்ரம பள்ளி ஊழியர்கள்!

அதே போல் ஆசிரியர்கள் சம்பளம் தராததால் கொந்தளித்து பள்ளி வளாகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு பிறகு பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் அதுபோலவே ஒரு பிரச்சனை கிளம்பி உள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.

ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையினையும் இதுவரை நிர்வாகம் செலுத்தாமல் இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget