மேலும் அறிய

மரம் மூலம் செயற்கை மழை பொழிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயற்கை விவசாயி

கரூர் க.பரமத்தி பகுதி மிகவும் வறட்சியான பகுதியாக மாறி தற்போது தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியாக இருக்கிறது.

மரம் வளர்த்தால் மழை பெய்யும் பழமொழிக்கு ஏற்ப மரம் மூலம் செயற்கை மழை பொழிய வைத்து அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயற்கை விவசாயி.


வேலம் மரக்கிளையில் பிளாஸ்டிக் குழாய் பொருத்தி சென்சார் முறையில் மழை பொழிவது போல் அமைப்பை செய்து மரங்களின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இயற்கை விவசாயி.

 


மரம் மூலம் செயற்கை மழை பொழிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயற்கை விவசாயி

 

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதி மிகவும் வறட்சியான பகுதியாக மாறி தற்போது தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியாக இருக்கிறது. மழை இங்கு அதிகம் பெய்யாத நிலையில் அதற்கு காரணம் அதிகமான கல்குவாரிகள் இயங்குவதும் மரங்களின் அளவு மிகவும் குறைந்து போனதுதான். அதற்கு ஈடு செய்யும் விதமாக கணக்குப்பிள்ளை புதூர் பகுதியில் வசிப்பவர் செல்லமுத்து. இவர் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது வீட்டை சுற்றி இயற்கை சூழலை செம்மைப்படுத்தி இருக்கிறார். அதோடு வீட்டை சுற்றி மூலிகை செடிகள், தேனி வளர்ப்பு, சிறிய அளவிலான உணவு காடு, என்று ஒரு மாடல் பண்ணை போல் அமைத்துள்ளார். இதை காண்பதற்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் வருகை தருகின்றனர்.

 


மரம் மூலம் செயற்கை மழை பொழிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயற்கை விவசாயி

 

இவர் தனது வீட்டின் அருகில் உள்ள 25 ஆண்டுகள் பழமையான வேலம் மரக்கிளையில் பிளாஸ்டிக் அமைத்திருக்கிறார். மாணவர்களுக்கு "மரம் வளர்த்தால் மழை பெய்யும்" என்று கூறினால் புரியாது என்பதற்காக செயற்கை மழைப்பொழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு மரத்தின் மேற்கு பக்கம் சென்சார் அமைத்திருக்கிறார். இந்த மரத்தை சுற்றிலும் அரசு, வன்னி, வில்வம், வஞ்சி, கருங்காலி, உள்ளிட்ட 12 ராசிகளுக்கான 27 நட்சத்திர மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். 27 நட்சத்திரங்களை சுற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஐதீகத்தின் அடிப்படையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மரக்கிளைகளில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை தண்ணீர் டேங்கில் இணைத்துள்ளார். மாணவர்கள் அந்த மரத்தில் இருக்கும் சென்சாரை அருகில் செல்லும் பொழுது செயற்கையாக டேங்கில் இருந்து பம்ப் ஆகும் தண்ணீர் மரக்கிளையில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாயில் வலி சென்று அந்த கிளைகளில் போடப்பட்ட நுண்ணிய துளைகளில் வழியாக செயற்கையான மழைப்பொழிவு போல் கீழே விழுகிறது.

 


மரம் மூலம் செயற்கை மழை பொழிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயற்கை விவசாயி

மாணவர்கள் சென்சாரை விட்டு அகன்றாலும் பத்து நொடியில் வரை தண்ணீர் மழை போல் கீழே பொழிகிறது. அந்த மரத்தை சுற்றி வெயில் அடிக்க மரத்தின் அடியில் மட்டும் திடீரென மழை பெய்வதால் ஒரு கனம் மாணவர்கள் நிஜமல்லவோ என்று மகிழ்ச்சியில் விளையாடி மகிழ்கின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் மாசு அதிகம் உள்ள பகுதிகளில் இதுபோன்று மரங்களில் செயற்கையாக மழை ஏற்படுத்தினால் மாசு கட்டுப்படுத்தலாம். இதுபோன்று பல்வேறு வகையில் மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget