மேலும் அறிய

மரம் மூலம் செயற்கை மழை பொழிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயற்கை விவசாயி

கரூர் க.பரமத்தி பகுதி மிகவும் வறட்சியான பகுதியாக மாறி தற்போது தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியாக இருக்கிறது.

மரம் வளர்த்தால் மழை பெய்யும் பழமொழிக்கு ஏற்ப மரம் மூலம் செயற்கை மழை பொழிய வைத்து அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயற்கை விவசாயி.


வேலம் மரக்கிளையில் பிளாஸ்டிக் குழாய் பொருத்தி சென்சார் முறையில் மழை பொழிவது போல் அமைப்பை செய்து மரங்களின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இயற்கை விவசாயி.

 


மரம் மூலம் செயற்கை மழை பொழிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயற்கை விவசாயி

 

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதி மிகவும் வறட்சியான பகுதியாக மாறி தற்போது தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியாக இருக்கிறது. மழை இங்கு அதிகம் பெய்யாத நிலையில் அதற்கு காரணம் அதிகமான கல்குவாரிகள் இயங்குவதும் மரங்களின் அளவு மிகவும் குறைந்து போனதுதான். அதற்கு ஈடு செய்யும் விதமாக கணக்குப்பிள்ளை புதூர் பகுதியில் வசிப்பவர் செல்லமுத்து. இவர் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது வீட்டை சுற்றி இயற்கை சூழலை செம்மைப்படுத்தி இருக்கிறார். அதோடு வீட்டை சுற்றி மூலிகை செடிகள், தேனி வளர்ப்பு, சிறிய அளவிலான உணவு காடு, என்று ஒரு மாடல் பண்ணை போல் அமைத்துள்ளார். இதை காண்பதற்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் வருகை தருகின்றனர்.

 


மரம் மூலம் செயற்கை மழை பொழிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயற்கை விவசாயி

 

இவர் தனது வீட்டின் அருகில் உள்ள 25 ஆண்டுகள் பழமையான வேலம் மரக்கிளையில் பிளாஸ்டிக் அமைத்திருக்கிறார். மாணவர்களுக்கு "மரம் வளர்த்தால் மழை பெய்யும்" என்று கூறினால் புரியாது என்பதற்காக செயற்கை மழைப்பொழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு மரத்தின் மேற்கு பக்கம் சென்சார் அமைத்திருக்கிறார். இந்த மரத்தை சுற்றிலும் அரசு, வன்னி, வில்வம், வஞ்சி, கருங்காலி, உள்ளிட்ட 12 ராசிகளுக்கான 27 நட்சத்திர மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். 27 நட்சத்திரங்களை சுற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஐதீகத்தின் அடிப்படையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மரக்கிளைகளில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை தண்ணீர் டேங்கில் இணைத்துள்ளார். மாணவர்கள் அந்த மரத்தில் இருக்கும் சென்சாரை அருகில் செல்லும் பொழுது செயற்கையாக டேங்கில் இருந்து பம்ப் ஆகும் தண்ணீர் மரக்கிளையில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாயில் வலி சென்று அந்த கிளைகளில் போடப்பட்ட நுண்ணிய துளைகளில் வழியாக செயற்கையான மழைப்பொழிவு போல் கீழே விழுகிறது.

 


மரம் மூலம் செயற்கை மழை பொழிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயற்கை விவசாயி

மாணவர்கள் சென்சாரை விட்டு அகன்றாலும் பத்து நொடியில் வரை தண்ணீர் மழை போல் கீழே பொழிகிறது. அந்த மரத்தை சுற்றி வெயில் அடிக்க மரத்தின் அடியில் மட்டும் திடீரென மழை பெய்வதால் ஒரு கனம் மாணவர்கள் நிஜமல்லவோ என்று மகிழ்ச்சியில் விளையாடி மகிழ்கின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் மாசு அதிகம் உள்ள பகுதிகளில் இதுபோன்று மரங்களில் செயற்கையாக மழை ஏற்படுத்தினால் மாசு கட்டுப்படுத்தலாம். இதுபோன்று பல்வேறு வகையில் மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Viral Video: ஷாக்கிங் வீடியோ! இப்படியா பண்ணுவீங்க? பள்ளி மாணவர்களை அந்த வேலையை செய்ய வைத்த அவலம்
ஷாக்கிங் வீடியோ! இப்படியா பண்ணுவீங்க? பள்ளி மாணவர்களை அந்த வேலையை செய்ய வைத்த அவலம்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
தாம்பரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்: பக்தர்களுக்கு தெற்கு ரயில்வேயின் வாராந்திர வரப்பிரசாதம்!
தாம்பரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்: பக்தர்களுக்கு தெற்கு ரயில்வேயின் வாராந்திர வரப்பிரசாதம்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Embed widget