மேலும் அறிய

Namakkal Accident: நாமக்கல் பட்டாசு விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை..! எப்படி..?

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு - சிலிண்டர் வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவைச் சேர்ந்த தில்லை குமார் என்பவர், பட்டாசு விற்பனை கடை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், கோயில் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பட்டாசு விற்பனை செய்யும் வகையில் அதிகளவு பட்டாசை வாங்கியிருக்கிறார். மேலும் அதிகளவு பட்டாசுகளை, நேற்று  எடுத்து வந்து வீட்டில் பதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. 

பட்டாசு - சிலிண்டர் விபத்து:

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் விபத்தில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. அதனையடுத்து, வீட்டில் இருந்த சிலிண்டரும் தீப்பற்றி வெடித்ததாக கூறப்படுகிறது.  

பட்டாசு வெடிப்பு மற்றும் சிலிண்டர் வெடிப்புகளால், பெரும் உயரத்துக்கு தீயானது சென்றது. மேலும், அருகிலிருந்த 100 மீட்டர் சுற்றளவில் இருந்த 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் இடிந்து சேதமானது

4 பேர் உயிரிழப்பு:

இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தில்லைக்குமார் தூக்கி வீசப்பட்டு உயிர் இழந்தார், அவரது  வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிய அவரது மனைவி பிரியங்கா, தாய் செல்வி சுவர் இடிபாடுகளில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்து நடந்த வீட்டின் அருகில் வசித்து வந்த பெரியக்காள் என்ற மூதாட்டியும் உடல் சிதறி உயிரிழந்தார். 

உயிர் பிழைத்த குழந்தை:

பட்டாசு கடையில் விற்பனை செய்யும் இளைஞரும், தில்லைகுமார் வீட்டில் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டவுடன், தில்லைகுமாரின் 5 வயது குழந்தையை இளைஞர் தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால், லேசான தீக்காயத்துடன் இருவரும் தப்பித்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் அருகில் உள்ள  வீடுகளில் வசித்து வந்த 11 பேர் காயமடைந்து நாமக்கல் மற்றும் மோகனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ அணைப்பு:

மேலும் சம்பவ இடத்திற்கு நாமக்கல், கரூர்  தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.  

குடியிருப்பு பகுதியில் அதிக அளவு நாட்டு வெடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Namakkal Accident: நாமக்கல் பட்டாசு விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை..! எப்படி..?

மேலும் சம்பவ இடத்தில் நாமக்கல் சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நிதியுதவி அறிவிப்பு:

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, ரூ. 2 லட்சம் நிதியுதவியும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
Embed widget