மேலும் அறிய

Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி

Thirupathur Doctor: திருப்பத்தூரில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thirupathur Doctor: திருப்பத்தூரில் தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில், அரசு மருத்துவர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாயும் சேயும் உயிரிழப்பு:

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் – துர்காதேவி தம்பதி. இவர்கள் இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், தனியார் காலணி ஆலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் கருவுற்று இருந்த துர்காதேவிக்கு (26), பிரசவ வலி ஏற்பட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பெண் குழந்தை பிறந்த உடனேயே அவரின் உடல்நிலை மோசமடைய, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அலைகழிக்கப்பட்டுள்ளார். இதனால், துர்காதேவி மற்றும் அவரது குழந்தை அடுத்தது உயிரிழந்துள்ளனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசு மருத்துவர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனைகளில் அலைகழிக்கப்பட்ட பெண்:

வெளியாகியுள்ள தகவல்களின்படி, துர்காதேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கமான சிகிச்சைகளை பெற்று வந்த ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  சுமார் 10 மணியளவில் துர்காவின் பனிக்குடம் உடைந்த நிலையில், பணியிலிருந்த செவிலியர்களிடம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் அலட்சியத்துடன் பதிலளித்ததுடன், ஒரு மணிநேரம் கழித்தே துர்காதேவியை பரிசோதிக்க வந்ந்துள்ளனர். மேலும், துர்காவுக்கு கர்ப்ப காலத்தில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் சியாமளா அங்கு இல்லாத நிலையில், செவிலியர்களே பிரசவம் பார்த்துள்ளனர். பெண் குழந்தை பிறந்த நிலையில், துர்காவுக்கு ரத்த கசிவு நிற்காததால், பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மருத்துவமனைக்கு தாயும் சேயும் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு மருத்துவர்கள் முயற்சித்தும் ரத்தப் போக்கு நிற்காததால் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தாயுடன் இன்குபேட்டரில் குழந்தையும் அழைத்துக் கொண்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், துர்காதேவியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பப் பையை அகற்றினால்தான் ரத்தப் போக்கை நிறுத்த முடியும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து,  கணவரின் ஒப்புதலுடன் கர்ப்பப் பையும் அகற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும்  ரத்தப்போக்கு நிற்காததால் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட துர்காதேவி, புதன்கிழமை இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனளின்ற் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, குழந்தையும் தருமபுரி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் உயிரிழந்ததாக” அந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவர் பணியிடமாற்றம்

இதனிடையே, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பணியில் இருந்த மருத்துவர் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால்தான் துர்காதேவி உயிரிழந்தார் என குற்றம்சாட்டி, இறந்தவரின் உறவினர்கள்,  எல்.மாங்குப்பம் கிராமத்தில் ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சியாமளா, திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர்களின் அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புகள்:

சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியை கண்டித்து, கடந்த வியாழனன்று மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாகவே இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் தான், மருத்துவர்களின் அலட்சியத்தால் ஆம்பூரில் தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழந்த மோசமான சம்பவமும் அரங்கேறியுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Citroen C3: ரூபாய் 6 லட்சம்தான் பட்ஜெட்..  Citroen C3 மைலேஜ், தரம் எப்படி? முழு விவரம் உள்ளே
Citroen C3: ரூபாய் 6 லட்சம்தான் பட்ஜெட்.. Citroen C3 மைலேஜ், தரம் எப்படி? முழு விவரம் உள்ளே
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
Indias population: பெண் கல்வியின் மேஜிக்.. இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Embed widget