மேலும் அறிய

Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி

Thirupathur Doctor: திருப்பத்தூரில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thirupathur Doctor: திருப்பத்தூரில் தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில், அரசு மருத்துவர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாயும் சேயும் உயிரிழப்பு:

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் – துர்காதேவி தம்பதி. இவர்கள் இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், தனியார் காலணி ஆலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் கருவுற்று இருந்த துர்காதேவிக்கு (26), பிரசவ வலி ஏற்பட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பெண் குழந்தை பிறந்த உடனேயே அவரின் உடல்நிலை மோசமடைய, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அலைகழிக்கப்பட்டுள்ளார். இதனால், துர்காதேவி மற்றும் அவரது குழந்தை அடுத்தது உயிரிழந்துள்ளனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசு மருத்துவர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனைகளில் அலைகழிக்கப்பட்ட பெண்:

வெளியாகியுள்ள தகவல்களின்படி, துர்காதேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கமான சிகிச்சைகளை பெற்று வந்த ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  சுமார் 10 மணியளவில் துர்காவின் பனிக்குடம் உடைந்த நிலையில், பணியிலிருந்த செவிலியர்களிடம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் அலட்சியத்துடன் பதிலளித்ததுடன், ஒரு மணிநேரம் கழித்தே துர்காதேவியை பரிசோதிக்க வந்ந்துள்ளனர். மேலும், துர்காவுக்கு கர்ப்ப காலத்தில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் சியாமளா அங்கு இல்லாத நிலையில், செவிலியர்களே பிரசவம் பார்த்துள்ளனர். பெண் குழந்தை பிறந்த நிலையில், துர்காவுக்கு ரத்த கசிவு நிற்காததால், பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மருத்துவமனைக்கு தாயும் சேயும் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு மருத்துவர்கள் முயற்சித்தும் ரத்தப் போக்கு நிற்காததால் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தாயுடன் இன்குபேட்டரில் குழந்தையும் அழைத்துக் கொண்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், துர்காதேவியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பப் பையை அகற்றினால்தான் ரத்தப் போக்கை நிறுத்த முடியும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து,  கணவரின் ஒப்புதலுடன் கர்ப்பப் பையும் அகற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும்  ரத்தப்போக்கு நிற்காததால் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட துர்காதேவி, புதன்கிழமை இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனளின்ற் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, குழந்தையும் தருமபுரி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் உயிரிழந்ததாக” அந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவர் பணியிடமாற்றம்

இதனிடையே, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பணியில் இருந்த மருத்துவர் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால்தான் துர்காதேவி உயிரிழந்தார் என குற்றம்சாட்டி, இறந்தவரின் உறவினர்கள்,  எல்.மாங்குப்பம் கிராமத்தில் ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சியாமளா, திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர்களின் அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புகள்:

சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியை கண்டித்து, கடந்த வியாழனன்று மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாகவே இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் தான், மருத்துவர்களின் அலட்சியத்தால் ஆம்பூரில் தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழந்த மோசமான சம்பவமும் அரங்கேறியுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Embed widget