மேலும் அறிய

578 திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் - அமைச்சர் சேகர்பாபு

இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள 578 திருக்கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு பேட்டி
 
சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அனைத்து மண்டல இணை மற்றும் துணை ஆணையர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்திய பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய அவர், “இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் கடந்த 15 மாதங்களில் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. 3,118 ஆக்கிரப்மிப்பாளர்களிடம் இருந்து  2,710 ஏக்கர் நிலம் மற்றும் 3,566 கோடி மதிப்பு உள்ள  சொத்துக்கள் மீட்க்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சொத்துக்களை வாடகைக்கு விட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. 
 
48 முதுநிலை கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை சிறப்பாக  நடைபெற்று வருகிறது. மேலும் 578 கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை  செய்ய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இரண்டு இந்த  மாதங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்.
 
பௌர்ணமி விளக்கு பூஜை அதிகப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தஞ்சை பெரிய கோவில் கோவை பட்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த ஆண்டு இரவு முழுவதும் சிவராத்திரி பூஜை மிகப்பெரிய அளவில் சிறப்பாக  நடத்த திட்டமிட்டுள்ளோம்.
 
சங்கரன் கோவிலில் பாம்பாட்டி சித்தரருக்கு விழா எடுக்கப்பட உள்ளது.10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகள் குறித்து இன்றைய 14 வது ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. பழனியில் ஜனவரி நடைபெறும் குடமுழுக்கு  குறித்து முழுமையாக ஆலோசித்துள்ளோம். பொன் எழுத்துக்களால் வரலாற்றில் எழுதும் அளவில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படும். கடந்த 2021 ஆண்டு சட்ட பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் 75% சதவீதம் திட்டங்களின் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மற்ற திட்டங்களின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களில்  25% திட்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.
 
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 17 வயது சிறுமிக்கு தீட்சிதர்கள் திருமணம் செய்து வைத்த விவகாரம்,
குழந்தை திருமணம் சட்டத்திற்கு புறம்பானது. தீட்சிதர்கள் அல்ல யார் அதை செய்தாலும் சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கும். சட்டம் தன் கடமையை செய்யும்” என்று கூறினார். திமுகவிற்கு எதிராக பாஜக  தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது  தொடர்பான கேள்விக்கு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு முடிவுரை எழுதப்படும் என தெரியவரும் என கூறினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget