மேலும் அறிய

Senthil Balaji : ‛ஆஜராக அவகாசம் கொடுங்க...’ அமலாக்கத்துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கால அவகாசம் கேட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.

அமலாக்கத்துறையில் ஆஜராக ஒருமாத காலம் அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் இன்று ஆஜராக வேண்டும் எனச் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜி அவகாசம் கேட்டு அமலாக்கத்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த ஜெ.ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். அவர் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டார் என அவர் மீது புகார் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி செந்தில் பாலாஜி தரப்புக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் இன்று அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சர் கால அவகாசம் கேட்டுக் கடிதம் எழுதியுள்ளார். செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்றை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Senthil Balaji : ‛ஆஜராக அவகாசம் கொடுங்க...’ அமலாக்கத்துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம்!


முந்தைய அதிமுக அமைச்சரவையில் பணமோசடி விவகாரம் நிகழ்வது இது முதல்முறையல்ல. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கஃபில் மீதான பணமோசடி புகார் குறித்து, 108 பேரிடம் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர்  விசாரணை செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் நிலோஃபர் கபில். கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கஃபில், அரசு வேலை வாங்கி தருவதாக 108 பேரிடம்  பேரிடம் 6 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக அவரது அரசியல் உதவியாளரான  பிரகாசம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார் .இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்ப திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து 108 பேரிடம் விசாரணை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், துணை கண்காணிப்பாளர்கள் பிரவீன்குமார், சச்சிதானந்தம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு  விசாரணை தொடங்கப்பட்டது. இது குறித்து டிஎஸ்பி பிரவீன் குமாரிடம்  கேட்டதற்கு 'அமைச்சர் நிலோபர் கஃபில் மற்றும் உதவியாளர் பிரகாசம் ஆகியோரிடம்  பணம் கொடுத்த 108 பேரில், முகவரி தெரிந்த  சிலருக்கு மட்டும் தற்போது சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தோம். 15 பேரிடம் விசாரணை செய்துள்ளோம். மேலும் இதில் அரசு அதிகாரிகள்  சம்பந்தப்பட்டுள்ளார்கள் அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் இந்த மோசடி குற்றச்சாட்டில் தொடர்புடைய  அதிகாரிகளின்  முகவரி கிடைத்தவுடன் அவர்களுக்கும் சம்மன்  அனுப்பி விசாரணை செய்யப்படும். பெயர் மட்டுமே புகாரில் உள்ளதால் முகவரிகள் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. சிலர் விசாரணைக்கு வர மறுக்கிறார்கள் என டிஎஸ்பி தெரிவித்தார். முழு விசாரணை முடிந்தவுடன், சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நிலோபர் கஃபில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
கொண்டையை மறைக்காமல் மாறுவேடம் போடுகிறார் அண்ணாமலை: அமைச்சர் வன்னிஅரசு விமர்சனம்!
கொண்டையை மறைக்காமல் மாறுவேடம் போடுகிறார் அண்ணாமலை: அமைச்சர் வன்னிஅரசு விமர்சனம்!
பொருளாதார உரிமை.. அக விலைப்படி நிலுவை; அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்கக் கோரிக்கை!
பொருளாதார உரிமை.. அக விலைப்படி நிலுவை; அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்கக் கோரிக்கை!
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?
மதுரையில் எகிறிய மல்லிகைப் பூ விலை.. (06.06.2026) இன்றைய முழு விலை நிலவரம் என்ன?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
Affordable 7-Seater Cars: உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
Embed widget