மேலும் அறிய

Senthil Balaji : ‛ஆஜராக அவகாசம் கொடுங்க...’ அமலாக்கத்துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கால அவகாசம் கேட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.

அமலாக்கத்துறையில் ஆஜராக ஒருமாத காலம் அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் இன்று ஆஜராக வேண்டும் எனச் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜி அவகாசம் கேட்டு அமலாக்கத்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த ஜெ.ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். அவர் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டார் என அவர் மீது புகார் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி செந்தில் பாலாஜி தரப்புக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் இன்று அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சர் கால அவகாசம் கேட்டுக் கடிதம் எழுதியுள்ளார். செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்றை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Senthil Balaji : ‛ஆஜராக அவகாசம் கொடுங்க...’ அமலாக்கத்துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம்!


முந்தைய அதிமுக அமைச்சரவையில் பணமோசடி விவகாரம் நிகழ்வது இது முதல்முறையல்ல. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கஃபில் மீதான பணமோசடி புகார் குறித்து, 108 பேரிடம் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர்  விசாரணை செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் நிலோஃபர் கபில். கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கஃபில், அரசு வேலை வாங்கி தருவதாக 108 பேரிடம்  பேரிடம் 6 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக அவரது அரசியல் உதவியாளரான  பிரகாசம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார் .இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்ப திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து 108 பேரிடம் விசாரணை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், துணை கண்காணிப்பாளர்கள் பிரவீன்குமார், சச்சிதானந்தம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு  விசாரணை தொடங்கப்பட்டது. இது குறித்து டிஎஸ்பி பிரவீன் குமாரிடம்  கேட்டதற்கு 'அமைச்சர் நிலோபர் கஃபில் மற்றும் உதவியாளர் பிரகாசம் ஆகியோரிடம்  பணம் கொடுத்த 108 பேரில், முகவரி தெரிந்த  சிலருக்கு மட்டும் தற்போது சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தோம். 15 பேரிடம் விசாரணை செய்துள்ளோம். மேலும் இதில் அரசு அதிகாரிகள்  சம்பந்தப்பட்டுள்ளார்கள் அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் இந்த மோசடி குற்றச்சாட்டில் தொடர்புடைய  அதிகாரிகளின்  முகவரி கிடைத்தவுடன் அவர்களுக்கும் சம்மன்  அனுப்பி விசாரணை செய்யப்படும். பெயர் மட்டுமே புகாரில் உள்ளதால் முகவரிகள் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. சிலர் விசாரணைக்கு வர மறுக்கிறார்கள் என டிஎஸ்பி தெரிவித்தார். முழு விசாரணை முடிந்தவுடன், சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நிலோபர் கஃபில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget