மேலும் அறிய

யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்

ஒருவர் யானை பாகனாக கோயிலில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். மற்றொருவர் ஏற்கெனவே பாகனாக இருந்தவருடைய மகன்.

திருச்செந்தூரில் கோயில் யானை மிதித்து உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு உரிய உதவி செய்து தரப்படும் என அமைச்சர் சேகர் பாபு வாக்குறுதி கொடுத்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம் யானை மிதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் நிதியுதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதலமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தொடர்பு கொண்டு பேச சொல்லியிருந்தார். அந்த வகையில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேல் முருகன் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்த்திருக்கின்றார். இது எதிர்பாராத ஒரு சம்பவம். 

அந்த யானையே அவர் இறந்தபிறகு அந்த பிரேதத்தை பார்த்து அழுததும், தட்டி தட்டி எழுப்பியதும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிறிதளவு ஏற்பட்ட சினத்தால் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. சிசிடிவி காட்சியை பார்த்தால் தெரியும். இருந்தாலும் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவர் யானை பாகனாக கோயிலில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். மற்றொருவர் ஏற்கெனவே பாகனாக இருந்தவருடைய மகன். நிச்சயமாக அந்த இரண்டு குடும்பங்களுக்கும் முதலமைச்சர் உதவுவதாக சொல்லியிருக்கிறார். நிச்சயமாக உதவுவோம். தகுதியிருந்தால் இறந்த பாகனின் மனைவிக்கு உரிய பணி உத்தரவாதமும் தருவோம். 

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு யானைகளை பொறுத்தவரை மாதம் இருமுறை கால்நடை மருத்துவர்களை வைத்து பரிசோதித்து வருகிறோம். யானைகளுக்கு தேவையான உணவுகள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீச்சல் குளம் கூட இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.  

நேற்றைய தினம் நடந்த சம்பவம் மிகவும் துயரமானது. மனம் வருந்துகிறோம். கலங்குகிறோம். இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது குடும்பங்களுக்கு உரிய உதவியை நிச்சயம் செய்வோம்” எனத் தெரிவித்தார். 

முன்னதாக, திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் யானை பாகனாக இருந்தவர். இன்னொருவர் அவரது உறவினர். யானைக்கு சிறிது கோபம் வந்ததையடுத்து இருவரையும் மிதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Embed widget