மேலும் அறிய

Minister PTR: பிடிஆர்-க்கே இந்த நிலைமையா? சட்டசபைக்கு வந்த சங்கதி? தேர்தல் நேரத்தில் ஸ்டாலினுக்கு புது தலைவலி?

PTR Palanivel Thiagarajan: சட்டசபையில் இன்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதால் திமுக-வின் உட்கட்சி மோதல் அம்பலமாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று நடந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது கூடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பொன் ஜெயஸ்ரீராம், எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனமும் இல்லை. 

சட்டசபையில் ஷாக் தந்த பிடிஆர்:

அதற்கு அருகிலேயே மைசூர் மற்றும் பெங்களூர் உள்ளது. அங்கிருப்பவர்களும் எங்கள் ஊரில் வந்து வேலை செய்யும் வகையில் எங்கள் ஊர் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைத்து தர அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது, இந்த கூட்டத்தொடரிலே இந்த அவையில் என்னுடைய துறையில் உள்ள சிக்கல்களை கூறியிருக்கிறேன். நிதியோ மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையில் செயல்படவில்லை. ஒரு சிறு பங்குதான் எனது துறையில் செயல்படுகிறது. 

டைட்டல், நியோ டைட்டல் தொழில்துறையில் செயல்பட்டு வருகிறது. அது அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தாலும் அதுதான் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனால், யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவர் செய்து கொடுப்பார் என்று நம்புகிறேன். எங்களிடம் இல்லை இவ்வாறு அவர் கூறினார். பின்னர், பேசிய சபாநாயகர் முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுங்கள். பாசிட்டிவாக பதில் சொல்லுங்கள் என்று கூறினார். 

தொடர் அதிருப்தி:

அமைச்சர் பிடிஆர் பாரம்பரியமான திமுக-வைச் சேர்ந்தவர். அதேசமயம் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொலைநோக்கு சிந்தனை கொண்டவராக கட்சியினராலும், பொதுமக்களாலும் கருதப்படுபவர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முதல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பிடிஆர் பின்னர் சில காரணங்களால் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது முதலே கட்சியில் சிலரது செயல்பாடுகளில் பிடிஆர் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், இன்று சட்டசபையிலே தனது துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவதாகவும், யாரிடம் அதிகாரமும், நிதியும், திறனும் இருக்கிறதோ என்று வெளிப்படையாகவே தனது அதிருப்தியை பகிரங்கமாக சட்டசபையில் வெளிப்படுத்தி வருகிறார். 

திமுக-விற்கு பின்னடைவு:

பிடிஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலருக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பிடிஆர் இன்று மறைமுகமாக குறிப்பிட்டது தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசையே குறிப்பிட்டிருப்பதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர். 

அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக-வினர் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் அடுக்கி வருகின்றன. இதில் அவ்வப்போது சில அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிடிஆர் சட்டசபையிலே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதும் திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

நிர்வாகிகள் வேதனை:

ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களின் துறைக்கே போதிய நிதி ஒதுக்காத இந்த அரசு, மற்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி தொகுதி உறுப்பினர்களின் தொகுதிக்கும் எப்படி நிதி ஒதுக்கும்?என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியுடன் இருப்பதும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  மேலும், தேர்தலுக்கு முன்பு கட்சிக்குள்ளே இருக்கும் உட்கட்சி பூசல், மூத்த நிர்வாகிகள் இடையேயான சிக்கல் ஆகியவற்றை கட்சித் தலைமை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. roif

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget