மேலும் அறிய

Duraimurugan Apology: அந்த பயம் இருக்கட்டும்.. மாற்றுத்திறனாளிகள் பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த துரைமுருகன்...

சர்ச்சையான பேச்சுக்காக, அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

சமீபத்தில், பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, பட்டை மற்றும் நாமத்தை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொன்முடி வகித்துவந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்த தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் என்ன கூறியுள்ளார் துரைமுருகன்.?

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கையிலேயே உடலில் குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு அழைத்து வந்ததை, முத்தமிழறிஞர் கலைஞர் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்"" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அப்படிப்பட்ட தானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டதாக, திமுக தலைவர் தன் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, தான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். கலைஞரால் வளர்க்கப்பட்ட தானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும் என கூறியுள்ள அவர், மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும் எனவும், அதற்காக தன் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

திமுக தலைவர் எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது தனக்குத் தெரியும் என்றும் அவருக்கும் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று தான் உறுதி அளிப்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் துரைமுருகன்.

பதவி போய்விடுமோ என்ற பயத்தில் அறிக்கையா.?

சர்ச்சையாக பேசியதால் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடியின் பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, துரைமுருகன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டள்ளார். இதனால், எங்கே தனக்கும் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

பொதுவாக வேறு எதற்குமே பயப்படாமல், தன் வாய்க்கு வந்ததை பேசும் அமைச்சர் துரைமுருகன், பதவி என்று வரும்போது, அதை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் பயப்படத்தான் செய்கிறார் என்றும், அதனால் தான், அறிக்கை விட்டு, தன் பதவியை காப்பாற்ற முயற்சித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget