மேலும் அறிய

ஆந்திராவுக்கு சென்ற மசாகான் டாக் திட்டம்: தமிழகத்துக்கு பெரும் இழப்பு- அரசு என்ன செய்யணும்?

மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும்- ராமதாஸ்.

தமிழ்நாட்டில் அமைய இருந்த மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் ஆந்திராவுக்கு மாறியது ஏன்? தமிழக தொழில் துறைக்கு இது பெரிய இழப்பு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய தொழில் முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும். கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, எஃகு தயாரிப்பு, இயந்திர உற்பத்தி, மின்சாதனங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துணைத் தொழில்கள் வளர்ச்சியடைந்திருக்கும்.

குறிப்பாக கடலோர மாவட்டங்களை மையமாகக் கொண்டு புதிய தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியுடன் கூடிய உயர்தர வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும். மாநில அரசுக்கு வரி வருவாய் அதிகரித்திருக்கும். துறைமுக வளர்ச்சிக்கும், ஏற்றுமதி வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கும்.

அரசின் செயல்திறன் குறித்து கேள்வி

ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் தற்போது ஆந்திரப் பிரதேசத்திற்கு மாறியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வந்த நிலையில், இவ்வளவு பெரிய திட்டம் வேறு மாநிலத்திற்கு சென்றிருப்பது அரசின் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் நிலைநிறுத்துவதற்காக மாநில அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டது? மத்திய அரசுடன் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது? திட்டத்திற்கு தேவையான நிலம், உள்கட்டமைப்பு மற்றும் சலுகைகள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்பதற்கான விளக்கத்தை தமிழக அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

என்ன செய்திருக்க வேண்டும்?

குறிப்பாக தொழில்துறை அமைச்சர், அரசு செயலாளர்கள் இந்த விவகாரத்தில் போதிய அக்கறை செலுத்தினார்களா? தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய இந்த முக்கிய முதலீட்டை தக்கவைத்துக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டனவா? என்ற சந்தேகங்கள் இயல்பாக எழுகின்றன. திட்டம் வேறு மாநிலத்திற்கு சென்ற பின்னர் வருத்தம் தெரிவிப்பதை விட, ஆரம்ப கட்டத்திலேயே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்திருக்க வேண்டும்.

எனவே, மசாகான் டாக் திட்டம் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு மாறியதற்கான முழுமையான காரணங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும், இனி இதுபோன்ற பெரிய முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறாத வகையில் தொழில் முதலீட்டு கொள்கைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியும், இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் முதன்மை பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget