மேலும் அறிய

ரயில் நிலையத்தில் அலைபாயும் மக்கள்..பயணிகள் கடும் அவதி!

சீர்காழி இரயில் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அறிவிப்பு பலகைகள் செயல்படாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் குத்தாலம் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் சீர்காழி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் சனிக்கிழமை மாலை (22.10.2025) முதல், ரயில்கள் குறித்த முக்கியத் தகவல்களைத் தெரிவிக்கும் மின்னணுத் தகவல் பலகைகள் (டிஸ்ப்ளே போர்டு) மற்றும் ரயில் பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதைக் காட்டும் கோச் பொசிஷன் போர்டுகள் (Coach Position Board) உள்ளிட்ட அனைத்து அறிவிப்புப் பலகைகளும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் கடும் குழப்பத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ரயில்கள் நிற்கும் சரியான இடமறியாமல் பயணிகள் நடைமேடையில் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது.

சேவை முடக்கத்திற்குக் காரணம் என்ன?

மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் இந்தச் சேவை முடக்கம் குறித்த தகவல்கள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்த திடீர் முடக்கத்திற்குக் காரணம், இந்த அறிவிப்புப் பலகைகளைப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை (Contract) எடுத்திருந்த நிறுவனம், ரயில்வே நிர்வாகத்திற்கு கட்டணம் தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

ஒலி அறிவிப்பை மட்டுமே நம்பியிருக்கும் பயணிகள்

மின்னணுத் தகவல் பலகைகள் அனைத்தும் செயலிழந்துள்ள நிலையில், தற்போது ரயில்வே ஊழியர்கள் ஒலிபெருக்கி (மைக்) மூலமான அறிவிப்பு (Announcement) மூலம் மட்டுமே ரயில் வருகை மற்றும் பெட்டிகளின் அமைப்பு குறித்த தகவல்களைப் பயணிகளுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த ஒலி அறிவிப்புகள் மட்டுமே ஒரு முக்கிய ரயில் நிலையத்தின் ஆயிரக்கணக்கான பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்கப் போதுமானதாக இல்லை. இதனால் பல வயதானவர்கள், பெண்கள் மற்றும் குடும்பத்துடன் பயணிப்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ரயில் பெட்டிகள் அறியாமல் அலைபாயும் நிலை

"கோச் பொசிஷன் போர்டு" என்பது ஒரு நடைமேடையில் ரயில் வந்து நிற்கும் போது, நமது பெட்டி (உதாரணமாக S1, A2, B3) சரியாக எந்த இடத்தில் வந்து நிற்கும் என்பதை முன்கூட்டியே காட்டி, பயணிகள் சரியான இடத்தில் காத்திருக்க உதவும் மிக முக்கியமான தகவல் அமைப்பாகும்.

தற்போது இந்தப் பலகைகள் வேலை செய்யாததால், பயணிகள் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்று தெரியாமல், ரயில் வந்த பின்னரும் தங்கள் பெட்டியைத் தேடி முழு நடைமேடைக்கும் ஓடி அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குறைந்த நேரம் மட்டுமே நிற்கும் விரைவு ரயில்களைப் பிடிப்பதற்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒரு ரயில் நிலையத்தில் தகவல் பலகைகள் செயலிழப்பது என்பது, பயண நேர விரயம் மற்றும் தேவையற்ற பதற்றம் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக விபத்தை ஏற்படுத்தும் என்பது ஒரு வேதனையான விஷயம். 

கோரிக்கை: உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்

சீர்காழி ரயில் நிலையத்தின் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அனைத்துத் தரப்பு மக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • ஒப்பந்ததாரரின் பிரச்சினைகள் காரணமாகப் பொதுமக்களின் அத்தியாவசியத் தகவல் உரிமை பாதிக்கப்படுவது நியாயமல்ல.
  • தகவல் பலகைகள் செயலிழந்திருப்பதால் ஏற்படும் குழப்பம் மற்றும் அவசரம் காரணமாகப் பயணிகள் தவறுதலாக ரயிலில் ஏறுவது அல்லது ரயிலைத் தவறவிடுவது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

எனவே, ரயில்வே அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ புதிய ஏற்பாடுகளைச் செய்து, கோச் டிஸ்ப்ளே போர்டு உட்பட அனைத்து அறிவிப்புப் பலகைகளையும் உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பயணிகளின் ஒருமித்த கோரிக்கையாகும். இந்த விவகாரத்தில் உயர்மட்ட ரயில்வே நிர்வாகம் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget