மேலும் அறிய

ரயில் நிலையத்தில் அலைபாயும் மக்கள்..பயணிகள் கடும் அவதி!

சீர்காழி இரயில் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அறிவிப்பு பலகைகள் செயல்படாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் குத்தாலம் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் சீர்காழி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் சனிக்கிழமை மாலை (22.10.2025) முதல், ரயில்கள் குறித்த முக்கியத் தகவல்களைத் தெரிவிக்கும் மின்னணுத் தகவல் பலகைகள் (டிஸ்ப்ளே போர்டு) மற்றும் ரயில் பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதைக் காட்டும் கோச் பொசிஷன் போர்டுகள் (Coach Position Board) உள்ளிட்ட அனைத்து அறிவிப்புப் பலகைகளும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் கடும் குழப்பத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ரயில்கள் நிற்கும் சரியான இடமறியாமல் பயணிகள் நடைமேடையில் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது.

சேவை முடக்கத்திற்குக் காரணம் என்ன?

மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் இந்தச் சேவை முடக்கம் குறித்த தகவல்கள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்த திடீர் முடக்கத்திற்குக் காரணம், இந்த அறிவிப்புப் பலகைகளைப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை (Contract) எடுத்திருந்த நிறுவனம், ரயில்வே நிர்வாகத்திற்கு கட்டணம் தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

ஒலி அறிவிப்பை மட்டுமே நம்பியிருக்கும் பயணிகள்

மின்னணுத் தகவல் பலகைகள் அனைத்தும் செயலிழந்துள்ள நிலையில், தற்போது ரயில்வே ஊழியர்கள் ஒலிபெருக்கி (மைக்) மூலமான அறிவிப்பு (Announcement) மூலம் மட்டுமே ரயில் வருகை மற்றும் பெட்டிகளின் அமைப்பு குறித்த தகவல்களைப் பயணிகளுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த ஒலி அறிவிப்புகள் மட்டுமே ஒரு முக்கிய ரயில் நிலையத்தின் ஆயிரக்கணக்கான பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்கப் போதுமானதாக இல்லை. இதனால் பல வயதானவர்கள், பெண்கள் மற்றும் குடும்பத்துடன் பயணிப்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ரயில் பெட்டிகள் அறியாமல் அலைபாயும் நிலை

"கோச் பொசிஷன் போர்டு" என்பது ஒரு நடைமேடையில் ரயில் வந்து நிற்கும் போது, நமது பெட்டி (உதாரணமாக S1, A2, B3) சரியாக எந்த இடத்தில் வந்து நிற்கும் என்பதை முன்கூட்டியே காட்டி, பயணிகள் சரியான இடத்தில் காத்திருக்க உதவும் மிக முக்கியமான தகவல் அமைப்பாகும்.

தற்போது இந்தப் பலகைகள் வேலை செய்யாததால், பயணிகள் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்று தெரியாமல், ரயில் வந்த பின்னரும் தங்கள் பெட்டியைத் தேடி முழு நடைமேடைக்கும் ஓடி அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குறைந்த நேரம் மட்டுமே நிற்கும் விரைவு ரயில்களைப் பிடிப்பதற்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒரு ரயில் நிலையத்தில் தகவல் பலகைகள் செயலிழப்பது என்பது, பயண நேர விரயம் மற்றும் தேவையற்ற பதற்றம் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக விபத்தை ஏற்படுத்தும் என்பது ஒரு வேதனையான விஷயம். 

கோரிக்கை: உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்

சீர்காழி ரயில் நிலையத்தின் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அனைத்துத் தரப்பு மக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • ஒப்பந்ததாரரின் பிரச்சினைகள் காரணமாகப் பொதுமக்களின் அத்தியாவசியத் தகவல் உரிமை பாதிக்கப்படுவது நியாயமல்ல.
  • தகவல் பலகைகள் செயலிழந்திருப்பதால் ஏற்படும் குழப்பம் மற்றும் அவசரம் காரணமாகப் பயணிகள் தவறுதலாக ரயிலில் ஏறுவது அல்லது ரயிலைத் தவறவிடுவது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

எனவே, ரயில்வே அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ புதிய ஏற்பாடுகளைச் செய்து, கோச் டிஸ்ப்ளே போர்டு உட்பட அனைத்து அறிவிப்புப் பலகைகளையும் உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பயணிகளின் ஒருமித்த கோரிக்கையாகும். இந்த விவகாரத்தில் உயர்மட்ட ரயில்வே நிர்வாகம் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழையா?
இன்றைய வானிலை அறிக்கை: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழையா? 
Coimbatore: கோவையில் வீட்டுக்குள் வந்து அடிக்கப்பட்ட கொசு மருந்து.. 2 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு?
Coimbatore: கோவையில் வீட்டுக்குள் வந்து அடிக்கப்பட்ட கொசு மருந்து.. 2 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget