மேலும் அறிய

ரயில் நிலையத்தில் அலைபாயும் மக்கள்..பயணிகள் கடும் அவதி!

சீர்காழி இரயில் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அறிவிப்பு பலகைகள் செயல்படாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் குத்தாலம் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் சீர்காழி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் சனிக்கிழமை மாலை (22.10.2025) முதல், ரயில்கள் குறித்த முக்கியத் தகவல்களைத் தெரிவிக்கும் மின்னணுத் தகவல் பலகைகள் (டிஸ்ப்ளே போர்டு) மற்றும் ரயில் பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதைக் காட்டும் கோச் பொசிஷன் போர்டுகள் (Coach Position Board) உள்ளிட்ட அனைத்து அறிவிப்புப் பலகைகளும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் கடும் குழப்பத்திற்கும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ரயில்கள் நிற்கும் சரியான இடமறியாமல் பயணிகள் நடைமேடையில் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது.

சேவை முடக்கத்திற்குக் காரணம் என்ன?

மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் இந்தச் சேவை முடக்கம் குறித்த தகவல்கள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்த திடீர் முடக்கத்திற்குக் காரணம், இந்த அறிவிப்புப் பலகைகளைப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை (Contract) எடுத்திருந்த நிறுவனம், ரயில்வே நிர்வாகத்திற்கு கட்டணம் தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

ஒலி அறிவிப்பை மட்டுமே நம்பியிருக்கும் பயணிகள்

மின்னணுத் தகவல் பலகைகள் அனைத்தும் செயலிழந்துள்ள நிலையில், தற்போது ரயில்வே ஊழியர்கள் ஒலிபெருக்கி (மைக்) மூலமான அறிவிப்பு (Announcement) மூலம் மட்டுமே ரயில் வருகை மற்றும் பெட்டிகளின் அமைப்பு குறித்த தகவல்களைப் பயணிகளுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த ஒலி அறிவிப்புகள் மட்டுமே ஒரு முக்கிய ரயில் நிலையத்தின் ஆயிரக்கணக்கான பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்கப் போதுமானதாக இல்லை. இதனால் பல வயதானவர்கள், பெண்கள் மற்றும் குடும்பத்துடன் பயணிப்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ரயில் பெட்டிகள் அறியாமல் அலைபாயும் நிலை

"கோச் பொசிஷன் போர்டு" என்பது ஒரு நடைமேடையில் ரயில் வந்து நிற்கும் போது, நமது பெட்டி (உதாரணமாக S1, A2, B3) சரியாக எந்த இடத்தில் வந்து நிற்கும் என்பதை முன்கூட்டியே காட்டி, பயணிகள் சரியான இடத்தில் காத்திருக்க உதவும் மிக முக்கியமான தகவல் அமைப்பாகும்.

தற்போது இந்தப் பலகைகள் வேலை செய்யாததால், பயணிகள் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்று தெரியாமல், ரயில் வந்த பின்னரும் தங்கள் பெட்டியைத் தேடி முழு நடைமேடைக்கும் ஓடி அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குறைந்த நேரம் மட்டுமே நிற்கும் விரைவு ரயில்களைப் பிடிப்பதற்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒரு ரயில் நிலையத்தில் தகவல் பலகைகள் செயலிழப்பது என்பது, பயண நேர விரயம் மற்றும் தேவையற்ற பதற்றம் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக விபத்தை ஏற்படுத்தும் என்பது ஒரு வேதனையான விஷயம். 

கோரிக்கை: உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்

சீர்காழி ரயில் நிலையத்தின் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அனைத்துத் தரப்பு மக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • ஒப்பந்ததாரரின் பிரச்சினைகள் காரணமாகப் பொதுமக்களின் அத்தியாவசியத் தகவல் உரிமை பாதிக்கப்படுவது நியாயமல்ல.
  • தகவல் பலகைகள் செயலிழந்திருப்பதால் ஏற்படும் குழப்பம் மற்றும் அவசரம் காரணமாகப் பயணிகள் தவறுதலாக ரயிலில் ஏறுவது அல்லது ரயிலைத் தவறவிடுவது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

எனவே, ரயில்வே அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ புதிய ஏற்பாடுகளைச் செய்து, கோச் டிஸ்ப்ளே போர்டு உட்பட அனைத்து அறிவிப்புப் பலகைகளையும் உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பயணிகளின் ஒருமித்த கோரிக்கையாகும். இந்த விவகாரத்தில் உயர்மட்ட ரயில்வே நிர்வாகம் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Manufacturing: பொம்மைகளின் மையமாகும் தமிழ்நாடு..! ரூ.25 லட்சம் கோடி மார்கெட் - 10 பேருக்கு பக்கா ஸ்கெட்ச்
TN Manufacturing: பொம்மைகளின் மையமாகும் தமிழ்நாடு..! ரூ.25 லட்சம் கோடி மார்கெட் - 10 பேருக்கு பக்கா ஸ்கெட்ச்
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை உத்திரப் பெருவிழா: 10 தலை ராவண வாகனத்தில் சுவாமி வீதி உலா!
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை உத்திரப் பெருவிழா: 10 தலை ராவண வாகனத்தில் சுவாமி வீதி உலா!
Miss koovagam 2026 : ஓய்யார நடையில் மேடையை அதிரவைத்த திருநங்கைகள்.. மகுடம் சூடிய சென்னை சிங்காரிகள்!
Miss koovagam 2026 : ஓய்யார நடையில் மேடையை அதிரவைத்த திருநங்கைகள்.. மகுடம் சூடிய சென்னை சிங்காரிகள்!
தேர்தல் முடிந்து மக்கள் வருவார்கள் என்று தெரியாதா? ஸ்தம்பித்த நெடுஞ்சாலை! எங்கே போலீஸ்?
தேர்தல் முடிந்து மக்கள் வருவார்கள் என்று தெரியாதா? ஸ்தம்பித்த நெடுஞ்சாலை! எங்கே போலீஸ்?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Manufacturing: பொம்மைகளின் மையமாகும் தமிழ்நாடு..! ரூ.25 லட்சம் கோடி மார்கெட் - 10 பேருக்கு பக்கா ஸ்கெட்ச்
TN Manufacturing: பொம்மைகளின் மையமாகும் தமிழ்நாடு..! ரூ.25 லட்சம் கோடி மார்கெட் - 10 பேருக்கு பக்கா ஸ்கெட்ச்
Selvaperunthagai: திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி.. செல்வப்பெருந்தகை போடும் கணக்கு!
Selvaperunthagai: திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி.. செல்வப்பெருந்தகை போடும் கணக்கு!
Donald Trump: ஏது எல்லாமே நாடகமா? ட்ரம்ப் மீது கொலை முயற்சி, உண்மையான தாக்குதலா? நீளும் லிஸ்ட்
Donald Trump: ஏது எல்லாமே நாடகமா? ட்ரம்ப் மீது கொலை முயற்சி, உண்மையான தாக்குதலா? நீளும் லிஸ்ட்
KKR Vs LSG: சூப்பர் ஓவரில் கோட்டை விட்ட லக்னோ..! ரிங்கு சிங் & நரைன் அபாரம், கொல்கத்தா அணி த்ரில் வெற்றி
KKR Vs LSG: சூப்பர் ஓவரில் கோட்டை விட்ட லக்னோ..! ரிங்கு சிங் & நரைன் அபாரம், கொல்கத்தா அணி த்ரில் வெற்றி
New Gen Fortuner: டயங்கரமான 5 அப்டேட்கள், ஜிம் பாயகா வரப்போகும் புதிய தலைமுறை ஃபார்ட்சுனர் - என்னெல்லாம் புதுசு?
New Gen Fortuner: டயங்கரமான 5 அப்டேட்கள், ஜிம் பாயகா வரப்போகும் புதிய தலைமுறை ஃபார்ட்சுனர் - என்னெல்லாம் புதுசு?
Karuppu Suriya: இவ்வளவு தூரம் வர கருப்பசாமி தான் காரணம்.. கருப்பு பட விழாவில் சூர்யா நெகிழ்ச்சி!
Karuppu Suriya: இவ்வளவு தூரம் வர கருப்பசாமி தான் காரணம்.. கருப்பு பட விழாவில் சூர்யா நெகிழ்ச்சி!
Chennai: சென்னையில் ஓடும் பேருந்தில் முதியவர் கொலை.. பஸ் ரூட் கேட்டதால் இளைஞர் ஆத்திரம்!
Chennai: சென்னையில் ஓடும் பேருந்தில் முதியவர் கொலை.. பஸ் ரூட் கேட்டதால் இளைஞர் ஆத்திரம்!
TN Election 2026: சென்னையில் வாக்குப்பதிவு அதிகமா? குறைவா? 2021 VS 2026 தேர்தல் ஒப்பீடு!
TN Election 2026: சென்னையில் வாக்குப்பதிவு அதிகமா? குறைவா? 2021 VS 2026 தேர்தல் ஒப்பீடு!
Embed widget