மேலும் அறிய

மயிலாடுதுறை: மனுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! ஆட்சியரிடம் குவிந்த குறைகள், தீர்வு காணப்படுமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்களிடமிருந்து 427 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன‌.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் ( டிசம்பர்-23 ) இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்களிடமிருந்து 427 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், நேரில் பெற்றுக்கொண்டார்.

குவிந்த மனுக்கள் - விரிவான விவரம்

திங்கட்கிழமை தோறும் நடைபெறும் இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இன்று காலை முதலே பொதுமக்கள் திரளாக வந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். பெறப்பட்ட 427 மனுக்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக மட்டும் அதிகப்படியாக 144 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

பிற முக்கிய கோரிக்கைகளின் விவரம் பின்வருமாறு

* நிலம் சார்ந்தவை: இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 35 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி 15 மனுக்களும், நில அபகரிப்பு தொடர்பாக 18 மனுக்களும் பெறப்பட்டன.

* சமூக பாதுகாப்பு: முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 36 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து 10 மனுக்களும் பெறப்பட்டன.

* வாழ்வாதாரம்: வேலைவாய்ப்பு கோரி 12 மனுக்களும், சுய தொழில் தொடங்க வங்கிக் கடன் மற்றும் தொழிற்கடன் கோரி 28 மனுக்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக 12 மனுக்களும் வழங்கப்பட்டன.

* அடிப்படை வசதிகள்: இலவச கான்கிரீட் வீடு வேண்டி 19 மனுக்களும், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 22 மனுக்களும் பெறப்பட்டன.

* இதர புகார்கள்: சட்டம் ஒழுங்கு தொடர்பாக 11, தொழிலாளர் நலன் சார்ந்து 9 மற்றும் பல்வேறு பொதுவான புகார்கள் குறித்து 50 மனுக்கள் என மொத்தம் 427 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.

ஆட்சியரின் அதிரடி உத்தரவு

மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக ஒப்படைத்தார். ஒவ்வொரு மனுவின் மீதும் மிகுந்த கவனத்துடன் ஆய்வு மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மனுதாரர்கள் அளித்துள்ள கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை உரிய காலத்திற்குள் மனுதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூட்டத்தின் நிறைவாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

* பேட்டரி சக்கர நாற்காலிகள்: தலா ரூ.1,06,000 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை 2 பயனாளிகளுக்கு (மொத்தம் ரூ.2.12 லட்சம்) ஆட்சியர் வழங்கினார்.

* தையல் இயந்திரம்: குடும்ப வறுமை நிலையில் உள்ள ஒரு பயனாளிக்கு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.8,650 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

பங்கேற்ற அதிகாரிகள்

இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் .உமாமகேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மலைமகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மாணிக்கண்ணன் (கணக்கு) மற்றும் வீ.சந்தான கோபால கிருஷ்ணன் (நிலம்) உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த மக்களும் நேரடியாக ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க முடிந்தது. இருப்பினும் ஒவ்வொரு வாரமும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்கிறதை பார்க்கும் போது மக்களின் குறைகள் குறையாமல் நாளுக்கு நாள் அதிகப்பதையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget