மேலும் அறிய

CM Stalin: ”சென்னை அனுபவத்தின் மூலம் தென்மாவட்ட மக்களை மீட்போம்” - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

CM Stalin: சென்னை அனுபவத்தின் மூலம் தென்மாவட்ட மக்களை மீட்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்பு மக்களிடமிருந்து மனுக்களை பெற்றதோடு, குறகளையும் கேட்டறிந்தார்.

”மக்களுடன் முதல்வர் திட்டம்”

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “மக்களுடன் முதல்வர் என்ற மகத்தான் திட்டத்தை  தொடங்கி வைத்து இருக்கிறேன். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்தது. அதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், மழைக்கு பிறகு போர்க்கால அடிப்படையிலும் செயல்பட்டு அரசு அதனை எதிர்கொண்டது. ஒருநாள் முழுக்க பெய்தது. மழை நின்றதுமே நிவாரணப் பணிகளை தொடங்கினோம். மறுநாள் காலையிலேயே முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீரடைந்தது. பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களில் மின் இணைப்பு மீண்டும் கிடைத்தது. புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. மாவட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் அறிவித்து, திட்டத்தையும் தொடக்கி வைத்தேன்.

”தென்மாவட்ட மக்களை மீட்போம்”

இதற்கிடையே தென்மாவட்டங்களிலும் இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. அரசு இயந்திரம் முழுமையாக தென்மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு வரை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடன் பேசிக்கொண்டிருந்தேன். சென்னையில் செயல்பட்டதை போன்றும், அந்த அனுபவத்தை கொண்டும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென்மாவட்ட மக்களை காப்போம். இது உறுதி.

”மக்களுடன் முதல்வர் திட்டத்தின் நோக்கம்”

முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்தும் போன்றவை திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டங்கள் ஆகும். அனைத்து தரப்பினரின் பாதுகாவலானாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திட்டங்கள் கடைகோடி மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தை தொடங்கி களத்திற்கு சென்று நானே ஆய்வு செய்தேன். அதன் மூலம் பொதுமக்கள் பயனடைவதை பார்க்க முடிகிறது. பெரும்பாலான அடிப்படை சேவைகள் இணையதளம் மூலமே வழங்கப்படுகிறது. மக்கள் அதிகம் அணுகும் 13 அரசு துறைகளின் பெரும்பாலான சேவகள் வழங்கப்படுகிறது. இதில் சில சிரமங்கள் இருப்பதாக அரசுக்கு தெரிய வந்தது. இதனை தீர்க்கும் வகையில் தான் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்று, எல்லா பொதுமக்களுக்கும் எல்லா சேவைகளையும் கிடைக்கச் செய்வது தான் திட்டத்தின் நோக்கம். அதாவது செயல்முறயை விரைவுபடுத்தி, தாமதங்களை குறைப்பது. மாற்று திறனாளிகள், முதியோர்களின் தேவைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை தீர்த்து வைப்பதில் இந்த திட்டம் தனி கவனம் செலுத்தும். நகர்ப்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், மக்களின் கோரிக்கைகள் மனுக்களாக பெறப்பட்டு, 30 நாட்களில் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் தேவையான சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். இது என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும்.

”இரண்டு கட்டங்களாக முகாம்கள்”

இந்த முகாம்கள் முதற்கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் 740 முகாம்கள் நடத்தப்படும்.  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ள நிவாரணப் பணிகள் முடிந்ததும், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக எல்லாம் மாவட்டங்களிலும் இருக்கும் ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு, முறையான கோரிக்கைகள் நிறவேற்றி தரப்படும். மக்களின் கோரிக்கைகள் மக்களுடன் முதல்வர் திட்டதின் இணையப்பகுதியில் பதிவேற்றப்படும். பொதுமக்கள் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி, உரிய சேவைகளை பெற வேண்டும்.

அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்:

இதுதொடர்பான அதிகாரிகளுக்கு உங்களின் முதலமைச்சர் அன்போடு சொல்வது என்னவென்றால், ஒவ்வொரு மனுவிற்கும் முடிவு காண்பது என்பது முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட வேண்டும். அப்போது தான் அரசு மீது ஏழைகள் கொண்டிருக்கும் நம்பிக்கை வலுவடையும். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் சென்னை கோட்டை நோக்கி வருவதை குறைக்க, மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்ட அளவில் முடிய வேண்டிய பிரச்னையை வட்ட அளவிலும், மாவட்ட அளவில் முடிய வேண்டிய பிரச்னைகளை மாவட்ட அளவிலும் முடிக்க போதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிய முறையில் செயல்பட வேண்டும். மக்களுக்கு பயனில்லாத தற்காலிக பதில்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amir Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ABP Premium

வீடியோ

”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amir Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
Embed widget