மேலும் அறிய

மதுரையில் மண்பரிசோதனை செய்ததெல்லாம் வேஸ்டா.. மெட்ரோ திட்டத்திற்கு கைவிரித்த மத்திய அரசு !

மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்து மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். - என கோரிக்கை எழுந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர், ஆக்ரா மற்றும் மஹாராஷ்டிராவில் நாக்பூர் உள்ளிட்ட நகரில் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ள போதிலும் அப்பகுதிகளில் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. - என குற்றச்சாட்டு.

மதுரை - கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்

தமிழகத்தில் பெருநகரமான சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக மதுரையில் திருமங்கலத்தில் இருந்து, மதுரை மாநகர் வழியாக ஒத்தைக்கடைக்கு 31.93 கிலோ மீட்டர் தூரத்திற்கும். கோவையில் அவனிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரை; உக்கடத்திலிருந்து - சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவி வரை, 39 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ திட்டமானது தீர்மானிக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என நம்பப்பட்டது

முக்கியம் வாய்ந்த மதுரை மற்றும் கோவை என இரண்டு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை, 10 மாதங்களுக்கு முன்னதாகவே தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. இந்த ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என நம்பப்பட்டது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஆய்வு பணி நடைபெற்று வந்தன. இந்த சூழலில் நம்பிக்கையுடன் காத்திருந்த தமிழக அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மக்கள் தொகை கணக்கீட்டின் படி 20 லட்சம் மக்கள் தொகை இருக்கும் நகர்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் ஏற்புடையது. கடைசியாக நடைபெற்ற மக்கள் தொகை கணக்கீட்டின் படி கோவையில் மக்கள் 15.84 லட்சமும், மதுரையில் 15 லட்சம் தான் என்பதால் இந்த இந்த இரண்டு நகருக்கு மெட்ரோ திட்டத்திற்கு பொருந்தாது என திருப்பு அனுப்பியுள்ளது. இது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அதிர்த்தியினை தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயிலுக்கு கைவிரிப்பு

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் & வழக்கறிஞர் பா.ஸ்டாலின் கூறுகையில்..,” மதுரை, கோவை போன்ற நகரத்திற்கு மெட்ரோ ரயில் அவசியமானது. மதுரை மெட்ரோ ரயிலுக்கு மட்டும் கிட்டதட்ட 11,360 கோடி ரூபாய் அளவிற்கு ரயில் திட்டங்களை செயல்படுத்த திட்ட அறிக்கை மாநில அரசு சார்பாக கடந்தாண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ திட்டம் செயல்பட்டால் மதுரை மற்றும் கோவையின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் வேலை வாய்ப்புகள் உயர்ந்து சென்னையின் நெருக்கம் குறையும். மதுரையின் திருமங்கலம் முதல் ஒத்தகடை மெட்ரோ திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்து வந்தோம். இந்த சூழலில் மெட்ரோ திட்டம் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.

மதுரையில் மண் பரிசோதனையால் ஏமாற்றம்

தென்மாவட்ட மக்களையும் - கொங்குபகுதி மக்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கின்படி உத்திரபிரதேச மாநிலம் கான்பூர், ஆக்ரா மற்றும் மஹாராஷ்டிராவில் நாக்பூர் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ள போதிலும் அப்பகுதிகளில் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் மக்கள் தொகை காரணம் காட்டி 2 முக்கிய நகருக்கு மெட்ரோ ரயில் கைவிரிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. மதுரையில் மண் பரிசோதனைகள் நடத்தப்பட்டதை பார்த்து மதுரைக்கு மெட்ரோ வந்து வளர்ச்சியடையும் என நம்பியது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்து மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்றார்.

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget