மேலும் அறிய

கலையரங்கம் கட்ட திட்டம்: கல்லூரி துணை முதல்வர்... உடனடியாக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கிய எம்.பி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு திறந்தவெளி கலையரங்கம் கட்டுவதற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எம்.பி.வெங்கடேசன் 5 லட்சம் நிதி ஒதுக்கி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக, நேற்று காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப் பட்டது.  இந்நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, "படிப்பதற்கென ஒரே பூங்கா மதுரையில் மட்டும் தான் உள்ளது. அது என் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவில் 25 சதவீதம் நிறைவேறி உள்ளது. 100 சதவீதம் நிச்சயம் நிறைவேற்றி விடுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது. மதுரை தொகுதியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 180 கோடி ரூபாய் கல்விக் கடன் பெற்றுத் தந்து உள்ளேன். மதுரை மாவட்டத்தில் மட்டும் பணிரண்டாவது முடித்துவிட்டு உயர்கல்வி தொடராமல் நிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 4800 ஆகும். அவர்களில் 90 சதவீத மாணவர்களுக்கு பொருளாதாரமே முதன்மைக் காணமாக இருக்கிறது. கல்விக் கடன் பெற்றுத்தருவதன் மூலம் அவர்களை உயர்கவியினைத் தொடர செய்ய முடியும். அனைத்து வித விமர்சனங்களையும் கடந்து காமராசர் அவருடைய கல்விப் பணிகளுக்காக மட்டுமே மக்கள் மனங்களில் நிறைந்து இருக்கிறார்”  என்றார்.

தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர் உரையாற்றும் போது, பேராசிரியர் Prabahar Vedamanickam  அவர்களின் ஃபேஸ்புக் பதிவு ஒன்றைச் சுட்டிக் காட்டி, பேராசிரியர் அவர்கள் முன்வைத்த குறையினைக் களையும் விதமாக எங்கள் கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் ஒரு திறந்தவெளி கலையரங்கம் கட்டத் திட்டமிட்டுள்ளோம்' என்று குறிப்பிட்டார்.

இதனை உற்று நோக்கிய நாடாளுமன்ற உறுப்பினர், கலையரங்கம் கட்டுவதற்கு தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உடனடியாக ரூபாய் 5 லட்சம் ஒதுக்குவதாக அறிவித்தார். தொடர்ந்து பேராசிரியர் பிரபாகர்  'இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டை எதிர்கொள்ளுதல்' என்கிற பொருளில் மிகச் சிறந்ததொரு பேருரை வழங்கினார். 'படிப்பது என்பது முழு நேரத் தொழில். எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் படிப்பதைப் பகுதிநேரமாகச் செய்ய முடியாது. இந்திய மாணவர் சமூகம் திறன் அற்றதாக உள்ளது. அதற்குக் காரணம் அவர்களிடம் கற்பனை வளம் இல்லை. உலகிலேயே இரண்டாவது மிப்பெரிய பொழுதுபோக்குச் சந்தை இந்தியத் திரைப்படத் துறைதான். ஆனால் இந்தியப் பாடத்திட்டங்களில் இசை, நாடகம், பாடல் போன்ற கலைகளுக்கு முக்கியத்துவம் இல்லை. 

உலகையே வழிநடத்தக் கூடிய நாடகத் திகழ்வது அமெரிக்கா. அதற்குக் காரணம் அங்குள்ள மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் தான். உலகின் மிகச்சிறந்த முதல் ஏழு பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவில் தான் உள்ளன.  இந்த நவீன உலகம் மிகச் சவால் நிறைந்தது. எதிர்காலத்தில் நிறைய உதவாக்கரைகளை உருவாக்கப் போகிறது. திறன் பெற்றவர்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் வேலைகள் கிடைக்கும். எனவே படிக்கும் காலங்களில் மாணவர்கள் கலையார்வத்துடன் தங்களின் தனித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்' அத்துடன்
 மரபு, பாரம்பரியம், பரம்பரை போன்றவற்றைச் சுமந்து கொண்டு உயர்கல்விக்குள் நுழையமுடியாது. இவற்றை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு தனி மனிதனாகத் தங்களுடைய ஆளுமையை, தனித் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Embed widget