Gas Cylinder Price: மீண்டுமா..! கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு - தற்போதைய நிலவரம் என்ன?
Gas Cylinder Price: சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
![Gas Cylinder Price: மீண்டுமா..! கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு - தற்போதைய நிலவரம் என்ன? LPG gas cylinder price hiked in chennai check the commercial cylinder price from march 1 Gas Cylinder Price: மீண்டுமா..! கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு - தற்போதைய நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/01/3dd58794feffc3451d5bebe8b74680f41709262751639732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Gas Cylinder Price: சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.23.50 உயர்ந்து, தற்போது ரூ.1960.50-க்கு விற்பனையாகிறது.
கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு:
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, வணிக சிலிண்டர் விலை தற்போது 1,960 ரூபாய் 50 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1,937 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வணிக கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வருவதால், உணவகங்களில் உணவுப் பொட்ருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது வெளியூர்களில் தங்கி உணவகங்களை நம்பி வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு பெரும் சுமையாய் கருதப்படுகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.918க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பலிக்காத எதிர்பார்ப்பு:
கடந்த ஜனவரி 1ம் தேதி 19 கிலோ கிராம் எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டது. இதனால் ரூபாய் 1,929க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டர் விலை ரூபாய் 1,924.50 ஆக குறைந்தது. முன்னதாக கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 39.50 குறைப்பட்ட நிலையில், புத்தாண்டில் மேலும் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டது வணிகர்களுக்கு புத்தாண்டில் ஒரு ஸ்வீட் நியூஸாக அமைந்தது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் மற்றும் தேர்தல் நடைபெற உள்ளதால், பிப்ரவரி மாதத்திலும் வணிக சிலிண்டர் விலை குறையும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு நேர் எதிராக வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மார்ச் மாதத்திலும் வணிக சிலிண்டரின் விலை உயர்ந்து இருப்பதால், வணிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
விலை மாற்றம் ஏன்?
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க முடியும். ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் கடந்த 620 நாட்களுக்கும் மேலாக எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், சமையலுக்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் நாள் அல்லது 16ம் தேதி அன்று மாற்றி அமைக்கலாம். இதன் அடிப்படையில் மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 23.50 உயர்த்தப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)