சுய உதவிக்குழுவினருக்கு குஷியோ குஷி.! ரொம்ப கம்மி வட்டியில் ரூ.25 லட்சம் கடன்- விண்ணப்பிப்பது எப்படி.?
Self Help Groups Low Interest Loan : சுய உதவிக்குழுவிற்கு பல்வேறு கடன் உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரொம்ப கம்மியான வட்டியில் 25 லட்சம் ரூபாய் வரை கடன் உதவிகளை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடன் உதவி திட்டங்கள்
மகளிர் சொந்தமாக முன்னேறும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறைந்த வட்டியில் கடன் உதவித்திட்டம். சொந்தமாக தொழில் தொடங்க பயிற்சி வழங்குவதோடு மானிய கடன் உதவியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக்கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.
அந்த வகையில் குழுக்கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 1.25 இலட்சம் ரூபாய் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக 25.00 இலட்சம் ரூபாய் வரையும் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
குழு கடன் பெற நிபந்தனைகள்
- கடனைத்திரும்ப செலுத்தும் காலம் 2 1/2 முதல் 3 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சுய உதவிக்குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர்திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இருபாலருக்கான சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி.?
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் மேலும் டாப்செட்கோ கடன் விண்ணப்பங்களை இணையதள முகவரியில் (http://tabcedco.net) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச்சான்றிதழ், குடும்பஅட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவணநகல்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுசங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
கறவை மாடுகள் வாங்க கடன் உதவி
இதே போல பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு 60,000 ரூபாய் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் 1,20,000 ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கான பல்வேறு கடன் உதவி திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கல்வி கடனுக்கும் விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்






















