மேலும் அறிய

EPS: ”நாங்களும் ஆட்சிக்கு வருவோம்.. அப்போ இருக்கு உங்களுக்கு” - முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த இபிஎஸ்

EPS: அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது, திமுகவினர் வழக்குகளும் மீண்டும் திறக்கப்பட்டு, மேல்விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்தின் முன் நிற்கும் காலம் விரைவில் வரும் என்று விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்

அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது, திமுகவினர் வழக்குகளும் மீண்டும் திறக்கப்பட்டு, மேல் விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்தின் முன் நிற்கும் காலம் விரைவில் வரும் என்று விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

சராமாரி கேள்வி

”ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சட்டத் துறை அமைச்சரே, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு அமைச்சர். அவர், தன் மீதான வழக்குகளை அரசியல் கட்சி சார்பற்ற நேர்மையான வழக்கறிஞர்களை வைத்து விசாரணையை விரைவுபடுத்துவாரா?

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, ஸ்டாலினால் குற்றம் சுமத்தப்பட்ட மந்திரி செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை, விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளது. கைதி எண் பெற்று சிறைத் துறை காவலில் உள்ள ஒருவரை துறையில்லா அமைச்சர் என்று பொம்மை முதலமைச்சர் அறிவித்தது ஏன்?

தற்போதைய அமைச்சர் ஒருவர், முதலமைச்சருடைய மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் தவிப்பதாக, பேசிய ஒலி நாடா ஒன்று சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்த நிலையில், அதைப் பற்றி இதுவரை பொம்மை முதலமைச்சர் எந்த ஒரு நடுநிலை விசாரணைக்கும் உத்தரவிடாமல் இருப்பது ஏன்?

எதிர் வரப்போகும் வழக்குகளில் இருந்து தப்பிக்க அங்கும் இங்குமாக அலைமோதும் ஒருவர், தனது குடும்பம் மற்றும் செந்தில்பாலாஜி மீதுள்ள குற்றங்களை மறைக்க, மாநில சுயாட்சி, திராவிட மாடல் மற்றும் ஆளுநருடன் மோதல் போன்ற உருட்டுகளை நடத்துவது, இவர் தன்னை உத்தமர் போல் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவா?

ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு மண்டியிட்டு மடல் எழுதுவது பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. இவருடைய சட்டத் துறை மந்திரி ரகுபதி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், எங்கள் முன்னாள் அமைச்சர்கள் பற்றி குறிப்பிட்டதையே மீண்டும் தன் கடிதத்தில் திரு. ஸ்டாலின் வாந்தி எடுத்தது ஏன்?

மெகா ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தனது குடும்பத்தையும், அரசையும் காப்பாற்றிக்கொள்ள, விதிவசத்தால் முதலமைச்சரான திரு. ஸ்டாலின், கடப்பாரையை விழுங்கி, சுக்கு கஷாயம் குடித்து ஏப்பம் விட்டுவிடலாம் என்று நினைக்கிறார். காற்றடித்த பலூனை எவ்வளவுதான் தண்ணீருக்குள் அழுத்தினாலும் அது மேலே வந்தே தீரும்.

எங்களுக்கு நீதியின்பால் நம்பிக்கை உள்ளது. எங்கள் முன்னாள் அமைச்சர்கள் மீது, திமுக அரசின் ஏவல் துறை மூலம் புனையப்பட்ட வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படவே இல்லை. அதற்குள் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ள விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எச்சரிக்கை விடுத்த எடப்பாடி

முதலில், விடியா ஆட்சியின் தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை அரசியல் கட்சி சார்பற்ற நேர்மையான வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து, நேர்மையாக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளுங்கள். மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும் முன் நீங்களும், உங்கள் சகாக்களும் உத்தமர்களா? என்று சிந்திக்கவும்.

"உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்" என்பது போல், அம்மாவின் ஆட்சி மீண்டும் அமையும்போது, உங்கள் அனைவருடைய வழக்குகளும் மீண்டும் திறக்கப்பட்டு, மேல்விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்தின் முன் நிற்கும் காலம் விரைவில் வரும் என்று விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்” என இபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: 30ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி? எதற்கு தெரியுமா?
PM Modi TN Visit: 30ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி? எதற்கு தெரியுமா?
Train Cancelled: சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை ரத்து; எந்தெந்த ரயில்கள் இயங்காது - விவரம் உள்ளே
சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை ரத்து; எந்தெந்த ரயில்கள் இயங்காது - விவரம் உள்ளே
Cyclone Remal: 10 பேர் மரணம்! மேற்கு வங்கத்தில் கரையை கடந்த ரெமல் புயல் - தற்போதைய நிலை என்ன?
Cyclone Remal: 10 பேர் மரணம்! மேற்கு வங்கத்தில் கரையை கடந்த ரெமல் புயல் - தற்போதைய நிலை என்ன?
Southern Railway Recruitment: ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் உதவியாளர் பணி; விண்ணப்பிப்பது எப்படி? - முழு விபரம் உள்ளே
ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் உதவியாளர் பணி; விண்ணப்பிப்பது எப்படி? - முழு விபரம் உள்ளே
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Hindu Muslim unity : பிள்ளையார் கோவில் கட்டுங்க! நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் வந்து அசத்தல்!IPL Final 2024 | WPL - IPL SAME TO SAME ஸ்க்ரிப்ட் இது நம்ம லிஸ்ட்லயே இல்ல!North Indian Issue | ’’அய்யோ..புள்ளை பிடிக்கறவன்?’’கட்டி வைத்த மக்கள்! சிக்கிய வடமாநிலத்தவர்Tirupati Accident News | திருப்பதி சென்ற குடும்பம் சுற்றுலாவில் நேர்ந்த சோகம் பதற வைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: 30ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி? எதற்கு தெரியுமா?
PM Modi TN Visit: 30ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி? எதற்கு தெரியுமா?
Train Cancelled: சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை ரத்து; எந்தெந்த ரயில்கள் இயங்காது - விவரம் உள்ளே
சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை ரத்து; எந்தெந்த ரயில்கள் இயங்காது - விவரம் உள்ளே
Cyclone Remal: 10 பேர் மரணம்! மேற்கு வங்கத்தில் கரையை கடந்த ரெமல் புயல் - தற்போதைய நிலை என்ன?
Cyclone Remal: 10 பேர் மரணம்! மேற்கு வங்கத்தில் கரையை கடந்த ரெமல் புயல் - தற்போதைய நிலை என்ன?
Southern Railway Recruitment: ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் உதவியாளர் பணி; விண்ணப்பிப்பது எப்படி? - முழு விபரம் உள்ளே
ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் உதவியாளர் பணி; விண்ணப்பிப்பது எப்படி? - முழு விபரம் உள்ளே
TNPSC Group 4 Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்  வெளியீடு; காண்பது எப்படி?
TNPSC Group 4 Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; காண்பது எப்படி?
IPL 2024 Final: இறுதிப்போட்டியில்
IPL 2024 Final: இறுதிப்போட்டியில் "சி.எஸ்.கே.. சி.எஸ்.கே." கோஷம் போட்ட ஷாருக்கான் - ஆர்ப்பரித்த ரசிகர்கள்!
இளம்பெண்கள் அறையை எட்டிப்பார்த்த இளைஞர்! மக்கள் கொடுத்த தர்ம அடியில் மரணம் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
இளம்பெண்கள் அறையை எட்டிப்பார்த்த இளைஞர்! மக்கள் கொடுத்த தர்ம அடியில் மரணம் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
TVK Vijay: மீண்டும் எஸ்.ஏ.சி உடன் இணைந்த விஜய்; குதூகலத்தில் த.வெ.க., தொண்டர்கள்!
TVK Vijay: மீண்டும் எஸ்.ஏ.சி உடன் இணைந்த விஜய்; குதூகலத்தில் த.வெ.க., தொண்டர்கள்!
Embed widget